Don't Miss!
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பிரபல ஹீரோ பர்த் டே.. பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கியதில் ரசிகர் பலி.. 4 பேர் படுகாயம்!
ஐதராபாத்: நடிகர் பிரபாஸின் பிறந்த தினத்தை முன்னிட்டு பேனர் கட்டிய அவர் ரசிகர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல தெலுங்கு ஹீரோ பிரபாஸ். பாகுபலி படத்துக்குப் பிறகு அவர் இந்தியா முழுவதும் அறியபட்டார்.
இதையடுத்து அவர் நடிக்கும் படங்கள் பான் இந்தியா முறையில் ஐந்து மொழிகளில் உருவாகி வருகின்றன.
ஜெயித்தாலும்.. தோத்தாலும்.. சிஎஸ்கே லவ் மாறாது.. மோசமான பேட்டிங்.. தாங்கி பிடிக்கும் பிரபலங்கள்!
சயின்ஸ் பிக்சன் கதை
அவர் இப்போது, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், நாக் அஸ்வின் இயக்கும் படங்களில் நடித்து வருகிறார். மெகா பட்ஜெட்டில் இந்த படங்கள் உருவாகி வருகின்றன. ராதே ஷ்யாம் படத்தில் அவர் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஆதிபுருஷ் படம், ராமாயணக் காவியத்தின் ஒரு பகுதியை கொண்டு உருவாகிறது. நாக் அஸ்வின் இயக்கும் படம் சயின்ஸ் பிக்சன் என்று தெரிகிறது.
திக்கு முக்காட
இந்நிலையில், நடிகர் பிரபாஸுக்கு நேற்று பிறந்த நாள். இதையடுத்து ஏராளமான திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளால் திக்கு முக்காட வைத்தனர். அவர் பிறந்தநாளை முன்னிட்டு ராதே ஷ்யாம் படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலானது.
பிரமாண்ட பேனர்கள்
பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் ரசிகர்கள், பல்வேறு பகுதிகளில் பிரமாண்ட பேனர்கள் கட்டியும் பட்டாசுகளை வெடித்தும் ரணகளமாகக் கொண்டாடினர். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள புனுரு என்ற பகுதியை சேர்ந்த ரசிகர்கள், பேனர் கட்டிக்கொண்டிருந்தனர்.
பேனர் கட்டும்போது
வன்கயலபட்டி சுகுனராவ் என்ற ரசிகர் உள்பட சிலர் மின் ஒயரைக் கவனிக்காமல் பேனரைக் கட்டியதாகக் கூறப்படுகிறது. அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில், சுகுனராவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் நான்கு ரசிகர்கள் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மின்சாரம் தாக்கி
இதுபற்றி போலீசார் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர். ஆந்திராவில் பேனர் கட்டும் போது மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன், பவன் கல்யாண் ரசிகர்கள் பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
ஆர்வலர்கள் கோரிக்கை
பிரபாஸின் சாஹோ பட ரிலீஸ் நேரத்திலும் பேனர் கட்டும்போது, தெலங்கானா மாநிலம், மகபூப் நகரைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி இதுபோன்று நடப்பதால், இதுபற்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.