இப்படி எல்லாம் நடக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை: பிரபாஸ் ஓபன் டாக்
ஹைதராபாத்: பாகுபலி போன்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது அரிது. அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பாகுபலி மூலம் உலகம் முழுவதும் அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று பிரபாஸ் தெரிவித்துள்ளார்.
பிரபாஸ் பல தெலுங்கு படங்களில் நடித்திருந்தாலும் பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்கள் மூலம் தான் உலகப் புகழ் பெற்றார். பிரபாஸை பார்த்து பாலிவுட்டின் கான்கள் எல்லாம் மிரண்டனர்.
அந்த அளவுக்கு அவர் பிரபலமானார்.

பாகுபலி நடிகர்
பாகுபலி படம் மூலம் சம்பாதித்த பெயரையும், புகழையும் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை. பாகுபலி நடிகர் பிரபாஸ் என்று கூறுவதை நான் பெருமையாகவே கருதுகிறேன் என்கிறார் பிரபாஸ்.

மகிழ்ச்சி
பாகுபலி போன்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது அரிது. அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பாகுபலி மூலம் உலகம் முழுவதும் அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று பிரபாஸ் தெரிவித்துள்ளார்.

எனக்கே முக்கியத்துவம்
பாகுபலி படத்திலும் சரி அதன் இரண்டாம் பாகத்திலும் சரி எனக்கு முக்கியத்துவம் அதிகம் உள்ள கதாபாத்திரம். இந்த வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி என்று பிரபாஸ் கூறியுள்ளார்.

பிரபாஸ்
பிரபாஸ் தற்போது சுஜீத் இயக்கத்தில் சாஹோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











