Don't Miss!
- News சென்னை பள்ளிக்கரணை ஆணவ கொலை: கோமாவுக்கு சென்ற பிரவீனின் மனைவி! ஷர்மி தற்கொலைக்கு யார் காரணம்?
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அமரேந்திர பாகுபலியைத் தொடர்ந்து அதிரடி போலீசாக மாறும் பிரபாஸ்
ஹைதராபாத்: பாகுபலியில் அமரேந்திர பாகுபலியாய் அசத்திய பிரபாஸ் அடுத்து போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பாகுபலி என்ற ஒரே படத்தின் மூலம் உலகளவில் தெரிந்த நடிகராக மாறியிருக்கிறார் பிரபாஸ். தற்போது பாகுபலி 2 படத்தில் நடித்து வரும் பிரபாஸ் அடுத்து எந்த மாதிரியான படத்தில் நடிக்கப் போகிறார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில் 'ரன் ராஜா ரன்' புகழ் சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருகின்றன. இந்தப் படத்தில் முதல் முறையாக பிரபாஸ் போலீஸாக நடிக்கவிருப்பதாக கூறுகின்றனர்.
பாகுபலி 2 வுக்குப் பின் பிரபாஸ் நடிக்கும் இந்த படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
பல பெரிய இயக்குநர்களும் பிரபாசை இயக்க காத்திருக்கும் நிலையில் சுஜீத்தின் மீதுள்ள நம்பிக்கை காரணமாக இந்த வாய்ப்பை பிரபாஸ் கொடுத்திருப்பதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
13 வருடங்களில் 19 படங்கள் நடித்திருக்கும் பிரபாஸ் இதுவரை எந்தப் படத்திலும் போலீஸ் வேடத்தில் நடித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.