Don't Miss!
- News உயிரைக் கொல்லும் ஸ்மோக் பிஸ்கட்! இவ்வளவு பாதிப்பு தருமா? தடை எப்போது?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பிரபாஸின் ராதே ஷ்யாம் ... பிளஸ்,மைனஸ் என்ன… ரசிகர்களின் பார்வை !
சென்னை : உலகையை உற்றுநோக்கவைத்துள்ள பான் இந்தியத் திரைப்படம் ராதே ஷ்யாம். பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
Recommended Video
யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரமாண்ட பொருட் செலவில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் ஒன்று.
இன்று வெளியாகி உள்ள இத்திரைப்படம் குறித்து ரசிகர்களின் கலவையான விமர்சனங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
காளிகாம்பாள் கோயிலில் சூப்பர் தரிசனம்.. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜனை சந்தித்த நயன்தாரா!
ராதே ஷ்யாம்
உலகையை திரும்பி பார்க்க வைத்த பாகுபலி நாயகன் பிரபாசை ரொமான்டிக் நாயகனாக மாற்றி உள்ள படம் ராதே ஷ்யாம். இப்படத்தில், கைரேகை ஜோதிடராக பிரபாஸ், தனது கையில் காதல் ரேகையே இல்லை என்கிறார். மருத்துவராக வரும் பூஜா ஹெக்டே பிரபாசை காதலிக்கிறார். படம் முழுக்க முழுக்க ரொமான்டிக் நிறைந்த காதல் படமாக உள்ளது.
காதல் கவிதை
பாகுபலி, சாஹோ திரைப்படத்தில் மிரட்டி இருந்த பிரபாஸ் இப்படத்தில் காதலில் கரைந்து உருகி உள்ளார். ஜோதிட நம்பிக்கை, காதல், பிரிவு என அனைத்தையும் ஒரே நேர்க்கோட்டில் கொடுத்து படத்திற்கு மிகப்பெரிய பிளஸ்சாக பிரபாஸ் இருக்கிறார். விதியை யாராலும் மாற்ற முடியாது என்ற வித்தியாசமான கதைக்களத்துடன் இப்படம் பயணிக்கிறது. படத்தின் ஒவ்வொரு காட்சி அமைப்பும் கைதட்டலை பெறும் அளவுக்கு கவிதை நயமாக இருந்தது.
ஆமை வேகத்தில்
முற்பாதி நாயகியின் வாழ்வு பற்றியும் பிற்பாதி பிரபாஸின் வாழ்வு பற்றி கதை ஆமை வேகத்தில் நகர்ந்து செல்ல அலுப்பை ஏற்படுத்தி படத்திற்கு மிகப்பெரிய மைனசாக அமைந்துள்ளது. சுவாரசியமான கதையை கையில் எடுத்த இயக்குநர் படத்தில் இருக்கும் லேகை குறைத்து இருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது. படம் முழுக்க ஜோசியம் பார்க்கும் பிரபாஸ் இந்த படத்தில் நடக்கலாமா வேண்டாமா என ஜோசியம் பார்த்து இருக்கலாம் என நக்கலாக கூறிவருகின்றனர்.
கவரவில்லை
கடைசியில் நம்பிக்கை வாழ்க்கை என்ற சத்யராஜின் வசனம் என்கேஜியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம்,கன்னடம் என 5 மொழிகளில் இப்படம் பான் இந்திய திரைப்படமாக இன்று வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் வெளியீடு இப்படம் தமிழ் ரசிகர்களைக் கவராமல் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.