Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஓ.கே.சொல்லலையாம்.. பிரபாஸ் படத்தில் நடிக்க பிரபல ஹீரோவுக்கு ரூ.20 கோடி சம்பளம் பேசிய நிறுவனம்!
சென்னை: பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க பிரபல நடிகருக்கு ரூ.20 கோடி வரை சம்பளம் தர முன் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பாகுபலி படங்களுக்குப் பிறகு நடிகர் பிரபாஸ் மார்கெட் வேற லெவலில் இருக்கிறது.
ஏன் தைரியமில்லாம போறீங்க.. ரியோவை சீண்டும் அனிதா.. வேற லெவல் புரமோ!
அந்தப் படங்களுக்குப் பிறகு அவர் நடிக்கும் படங்கள் பான் இந்தியா முறையில் உருவாகி வருகின்றன.
காதல் கதை
அவர் நடித்த சாஹோ படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவானது. அடுத்து இப்போது ராதே ஷ்யாம் படத்தில் நடித்து வருகிறார். இதை கே.கே. ராதாகிருஷ்ணா இயக்கி வருகிறார். பூஜா ஹெக்டே ஹீரோயின். பீரியட் காதல் கதையான இது, ஐரோப்பிய பின்னணியில் நடக்கிறது.
ராமாயணக் காவியம்
இதற்கிடையே இந்தி இயக்குனர் ஓம்ராவத் இயக்கும் 'ஆதிபுருஷ்' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படம் பற்றிய அறிவிப்பையும் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிட்டிருந்தனர். ராமாயணக் காவியத்தின் ஒரு பகுதி கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது.
காவிய கதாபாத்திரம்
இந்தி, தெலுங்கில் 3டி-யில் உருவாகும் இந்தப் படத்தை தமிழ், மலையாளம், கன்னட மொழிகளிலும் வெளியிடுகின்றனர். அடுத்து நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் நடிக்கிறார், பிரபாஸ். அதில் தீபிகா படுகோன் ஹீரோயின். இந்தப் படம் எப்போது தொடங்கும் என தெரியவில்லை.
பிரசாந்த் நீல்
இதற்கிடையே, கே.ஜி.எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் சலார் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். பிரம்மாண்டமான ஆக்ஷன் படமாக இது உருவாகிறது. இதை கே.ஜி.எஃப் பட தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாளே பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.
Recommended Video
மோகன் லால்
இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க வைக்க பிரபல மலையாள ஹீரோ, மோகன்லாலிடம் பேசியுள்ளனர். இதற்காக அவருக்கு சம்பளமாக ரூ. 20 கோடி வரையில் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர் இதுவரை ஏதும் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.