“நாய் சேகர் ரிட்டன்ஸ்“ வடிவேலுவுடன் இணையும் மற்றொரு பிரபலம்… மாஸ்தான் போங்க !
சென்னை : நாய் சேகர் ரிட்டன்ஸ் மூலம் நகைச்சுவையில் வெளுத்து வாங்க வருகிறார் வைகை புயல் வடிவேலு.
கிட்டத்தட்ட 5 வருடங்களுக்குப் பிறகு வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் நடித்து வருவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும், இத்திரைப்படத்தில் வடிவேலுவுடன் பிரபுதேவாவும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாய் சேகர் ரிட்டன்ஸ்
நடிகர் வடிவேலுவின் கம்பேக் படமாக உருவாகி வருகிறது நாய் சேகர் ரிட்டன்ஸ் சுராஜ் இயக்கத்தில் லைகா புரோடக்ஷன் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக ஷிவானி நாராயணன் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இது தவிர இவர்களுடன் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

விறுவிறுப்பான படப்பிடிப்பு
இந்த படத்தில் ஒரு பாடல் சூட்டிங்கிற்காக வெளிநாடு சென்று திரும்பிய வடிவேலுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், அதிலிருந்து மீண்டு தற்போது மீண்டும் சூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். இதையடுத்து படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

பல ஆண்டுகளுக்கு பிறகு
நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் வடிவேலு ஒரு பாடல் பாடி உள்ளார். அந்த பாடல் சிறப்பாக வர நடன இயக்குநர் பிரபுதேவாவிடம் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பாடலில், நடிகர் வடிவேலுவுடன், சிறப்பு தோற்றத்தில் பிரபுதேவாவும் நடனமாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தில் இணைய உள்ளனர்.

sing in the rain....
நடன இயக்குனராக இருந்த பிரபுதேவா ஹீரோவாக அறிமுகமான காதலன் திரைப்படத்தில் இருவரும் இணைந்து கலக்கி இருப்பார்கள். அது மட்டுமல்லாமல் மனதை திருடிவிட்டாய் திரைப்படத்தில் பிரபுதேவா வடிவேலுவின் நகைச்சுவை அட்டகாசமாக இருக்கும்... sing in the rain....i am swine in the rain...என்று அந்த திரைப்படத்தில் அல்டிமேட் கலாட்டா செய்து படம் முழுக்க சிரிக்க வைத்து இருப்பார் வடிவேலு.


Click it and Unblock the Notifications











