Don't Miss!
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- News நீ ஹெல்ப்பர் கேள்வி கேட்காதே.. அரசு வண்டியில் பீர் குடித்த இபி ஆபிசர்.. மறக்க முடியாத பரிசு..வீடியோ
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
அரவிந்த்சாமி வழியைப் பின்பற்றும் பிரபுதேவா!
சென்னை : பாலிவுட் படங்களை இயக்குவதில் ஆர்வமாகச் செயல்பட்ட பிரபுதேவா, 'தேவி' படத்தின் வெற்றிக்கு பின், நடிப்பில் முழுகவனம் செலுத்தி வருகிறார்.
ஹன்சிகாவுடன் அவர் நடித்து வரும் 'குலேபகாவலி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, திரைக்கு வரத் தயாராக உள்ளது. இந்தப் படத்தில், ஒரு பாடல் காட்சிக்காக, சென்னையில் இரண்டு கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட செட் போடப்பட்டுப் படப்பிடிப்பு நடந்ததை, ஆச்சரியத்துடன் பேசுகின்றனர் படக்குழுவினர்.
இந்தப் படத்துக்கு பின், லட்சுமி மேனனுடன் 'யங் மங் சங்' என்ற படத்திலும் ஹீரோவாக நடிக்கும் பிரபுதேவா, 'மெர்க்குரி' என்ற படத்தில் வில்லனாகவும் நடிக்கிறாராம். குறும்படங்களில் நடித்துவரும் சனத் ரெட்டி தான் இந்தப் படத்தின் ஹீரோவாம்.
அரவிந்த்சாமியைப் போல் மாறுபட்ட வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர முடிவு செய்துள்ளாராம், பிரபுதேவா. அதற்காகவே இந்த வில்லன் கேரக்டர்களை ஏற்று நடித்து வருகிறாராம்.