Don't Miss!
- News ம்ம்.. என்னோட 90 நிமிஷ பேச்சை கேட்டு காங்கிரஸ் கூட்டணியே பீதியாகிபோய் கிடக்கு.. பெருமிதப்படும் மோடி
- Lifestyle இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அரவிந்த்சாமி வழியைப் பின்பற்றும் பிரபுதேவா!
சென்னை : பாலிவுட் படங்களை இயக்குவதில் ஆர்வமாகச் செயல்பட்ட பிரபுதேவா, 'தேவி' படத்தின் வெற்றிக்கு பின், நடிப்பில் முழுகவனம் செலுத்தி வருகிறார்.
ஹன்சிகாவுடன் அவர் நடித்து வரும் 'குலேபகாவலி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, திரைக்கு வரத் தயாராக உள்ளது. இந்தப் படத்தில், ஒரு பாடல் காட்சிக்காக, சென்னையில் இரண்டு கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட செட் போடப்பட்டுப் படப்பிடிப்பு நடந்ததை, ஆச்சரியத்துடன் பேசுகின்றனர் படக்குழுவினர்.
இந்தப் படத்துக்கு பின், லட்சுமி மேனனுடன் 'யங் மங் சங்' என்ற படத்திலும் ஹீரோவாக நடிக்கும் பிரபுதேவா, 'மெர்க்குரி' என்ற படத்தில் வில்லனாகவும் நடிக்கிறாராம். குறும்படங்களில் நடித்துவரும் சனத் ரெட்டி தான் இந்தப் படத்தின் ஹீரோவாம்.
அரவிந்த்சாமியைப் போல் மாறுபட்ட வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர முடிவு செய்துள்ளாராம், பிரபுதேவா. அதற்காகவே இந்த வில்லன் கேரக்டர்களை ஏற்று நடித்து வருகிறாராம்.