Don't Miss!
- Sports கேமரா மேனை சிக்சரால் பதம் பார்த்த ரிஷப் பண்ட்.. விசயம் தெரிந்த உடன் பண்ட் செய்த நெகிழ்ச்சி சம்பவம்
- News தோசைக்கு ஏன் ‛தோசை’னு பெயர் வந்தது தெரியுமா? அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சுவாரசியம்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரயிலில் கொல்ல முயன்று காப்பாற்றப்பட்ட குழந்தையை தத்தெடுக்க பிரபுதேவா, லாரன்ஸ் விருப்பம்!
செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த மின்சார ரயிலில் ஒரு பெண் பிளாஸ்டிக் பையில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு வந்தார். குழந்தையின் அழுகுரல் கேட்டு பயணிகள் பையை வாங்கி பார்த்தனர். அப்போது உள்ளே குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
திடீரென்று அப்பெண் குழந்தையை பையில் சுற்றி ரெயிலில் இருந்து தூக்கி வீச முயன்றாள். பயணிகள் அவளை மடக்கி பிடித்து குழந்தையை மீட்டனர். தாம்பரம் போலீசார் விசாரித்தபோது வேறு ஒருவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் பெண் குழந்தை பிறந்ததாக தெரிவித்தாள். அவள் பெயர் சித்ரா என்று தெரியவந்தது.
மனித உரிமைகள் கழக மாநில மகளிர் அணி அமைப்பாளரும் ஜான்சிராணி பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சங்க தலைவியுமான கல்பனாவிடம் அக்குழந்தை ஒப்படைக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு கிருஷ்ணவேணி என பெயரிட்டுள்ளனர். குழந்தை 3.5 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த குழந்தையை தத்து எடுத்து வளர்க்க விருப்பம் தெரிவித்து நடிகர்கள் பிரபுதேவா, லாரன்ஸ் ஆகியோர் அணுகியுள்ளனர். நடிகை விசாலி கண்ணதாசனும் தன்னிடம் தத்து கொடுக்கும்படி கேட்டுள்ளார்.
மனித உரிமைக்கழக தலைவர் சுரேஷ் கண்ணன், சென்னை மாவட்ட அமைப்பாளர் வக்கீல் அசோக்குமார் ஆகியோர் சட்டப்பூர்வமான முறையில் குழந்தையை தத்து கொடுப்பது பற்றி ஆலோசித்து வருகின்றனர்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!