Don't Miss!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- News திடீரென கழன்று விழுந்த சக்கரம்! ஜஸ்டு மிஸ்ஸில் தப்பிய பயணிகள் விமானம்! மரண விளிம்புக்கே சென்ற மக்கள்
- Lifestyle யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
சிறையிலுள்ள சஞ்சய்தத் தயாரிப்பில் ஹிந்தி படம் இயக்கும் பிரபுதேவா
மும்பை: பாலிவுட் முன்னணி நடிகர் சஞ்சய் தத் தயாரிக்கும் படத்தை பிரபுதேவா இயக்குகிறார்.
தமிழில் இருந்து ஹிந்திக்கு சென்ற பிரபுதேவா, அங்கு முக்கியமான இயக்குனராகி விட்டார். அவர் இயக்கிய, வான்டட், ரவுடி ரத்தோர், ராமையா வஸ்தாவையா ஆகிய படங்கள் தொடர்ந்து ஹிட்டானதால் பாலிவுட் உலகம் பிரபுதேவாவுக்கு ரத்தன கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்து வருகிறது.
இப்போது அவர் அஜய் தேவ்கன் நடிக்கும் ஆக்ஷன் ஜாக்சன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதுபற்றி பிரபுதேவா கூறியதாவது: ஆக்ஷன் ஜாக்சன் படத்துக்கு இன்னும் 15 நாள் ஷூட்டிங் இருக்கிறது. அதோடு படம் முடிந்துவிடும்.
அடுத்து அக்ஷய் குமார் நடிக்கும் படத்தை இயக்குகிறேன். ரெமோ இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறேன். இதற்கிடையில் சஞ்சத் தத் தயாரிக்கும் படத்தை இயக்க இருக்கிறேன். கதையோ மற்ற விஷயங்களோ முடிவாகவில்லை. இவ்வாறு பிரபுதேவா கூறினார்.
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி சிறையிலுள்ள சஞ்சய் தத்தின் மனைவி மான்யதா தயாரிப்பு நிர்வாகத்தை கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.