சிறையிலுள்ள சஞ்சய்தத் தயாரிப்பில் ஹிந்தி படம் இயக்கும் பிரபுதேவா
மும்பை: பாலிவுட் முன்னணி நடிகர் சஞ்சய் தத் தயாரிக்கும் படத்தை பிரபுதேவா இயக்குகிறார்.
தமிழில் இருந்து ஹிந்திக்கு சென்ற பிரபுதேவா, அங்கு முக்கியமான இயக்குனராகி விட்டார். அவர் இயக்கிய, வான்டட், ரவுடி ரத்தோர், ராமையா வஸ்தாவையா ஆகிய படங்கள் தொடர்ந்து ஹிட்டானதால் பாலிவுட் உலகம் பிரபுதேவாவுக்கு ரத்தன கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்து வருகிறது.

இப்போது அவர் அஜய் தேவ்கன் நடிக்கும் ஆக்ஷன் ஜாக்சன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதுபற்றி பிரபுதேவா கூறியதாவது: ஆக்ஷன் ஜாக்சன் படத்துக்கு இன்னும் 15 நாள் ஷூட்டிங் இருக்கிறது. அதோடு படம் முடிந்துவிடும்.
அடுத்து அக்ஷய் குமார் நடிக்கும் படத்தை இயக்குகிறேன். ரெமோ இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறேன். இதற்கிடையில் சஞ்சத் தத் தயாரிக்கும் படத்தை இயக்க இருக்கிறேன். கதையோ மற்ற விஷயங்களோ முடிவாகவில்லை. இவ்வாறு பிரபுதேவா கூறினார்.
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி சிறையிலுள்ள சஞ்சய் தத்தின் மனைவி மான்யதா தயாரிப்பு நிர்வாகத்தை கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











