Don't Miss!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கலக்குது பாரு இவர் ஸ்டைலு.... "மைக்கேல்" சிலையை திறந்து வைத்த இந்திய "ஜாக்சன்"!
சென்னை: மைக்கேல் ஜாக்சன் சிலையை நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா சென்னை கல்லூரி வளாகம் ஒன்றில் திறந்து வைத்திருக்கிறார்.
தன்னுடைய அற்புதமான நடனத்தால் உலகில் உள்ள ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப் போட்டவர் மைக்கேல் ஜாக்சன்.
குறிப்பாக அவரின் ராப் நடனங்கள் உலகப் பிரசித்தம் பெற்றவை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் மைக்கேல் ஜாக்சன் இறந்து போனார்.
வருடங்கள் கடந்தும் அவரது மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படாமலேயே இருக்கின்றன.
இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி வளாகம் ஒன்றில், மைக்கேல் ஜாக்சன் சிலையை 'நடனப்புயல்' பிரபுதேவா திறந்து வைத்திருக்கிறார்.
தலையில் தொப்பியுடன் மார்பில் கை வைத்தபடி, ஒருவிரலை நீட்டிக் காட்டுவது போல மைக்கேல் ஜாக்சன் சிலையை வடிவமைத்துள்ளனர்.
சிலையைத் திறந்து வைத்தபின் பிரபுதேவாவும் அதேபோன்று போஸ் கொடுத்தார். இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என பிரபுதேவா அழைக்கப்படுகிறார்.
10 வருடங்களுக்குப் பின் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னாவுடன் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.