Don't Miss!
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- News
"திவாலாகும் பாகிஸ்தான்?" சுற்றி சுழன்றடிக்கும் சிக்கல்கள்! தயங்கும் உலக நாடுகள்! என்ன தான் நடக்கிறது
- Finance
'மசாஜ்' எல்லாம் இனி கிடையாது.. சுந்தர் பிச்சை எடுத்த முடிவு.. டிவிட்டர் போலக் கூகுள்..!
- Sports
ஐபிஎல்-க்கு முன் உள்ள கடைசி டி20.. 3 முக்கிய முடிவுகளை எடுக்கும் ஹர்திக்.. குழப்பத்தில் ரசிகர்கள்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
மீண்டும் மனைவியுடன் இணைகிறார் பிரபுதேவா?

பிரபுதேவா கடந்த வருடம் ஜூலை மாதம் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்தார். மனைவிக்கும், குழந்தைகளுக்கும் வீடுகள், சொத்துக்களை எழுதி வைத்து செட்டில் செய்தார். பின்னர் நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளத் தயாரானார். மும்பையில் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்தனர்.
நயன்தாரா சினிமாவுக்கு முழுக்கு போட்டார். இந்து மதத்துக்கும் மாறினார். ஆனால் திடீரென அவர்கள் திருமணம் நின்றது. காதலும் முறிந்தது.
பிரபு தேவா நம்பிக்கை துரோகம் செய்ததாக நயன்தாரா குற்றம்சாட்டினார்.
நயன்தாராவை பிரிந்த பிறகு மும்பையில் வீடு எடுத்து தங்கி இந்திப் படங்களை இயக்கி வந்தார். ஆனாலும் பிள்ளைகளைப் பார்க்க அடிக்கடி சென்னைக்கு வந்துவிடுகிறார் பிரபுதேவா.
சமீபத்தில் மனைவி ரம்லத்தை சந்தித்து அவர் பேசியதாகக் கூறப்படுகிறது. ரம்லத்தையும், குழந்தைகளையும் மும்பைக்கு அழைத்து சென்று சில தினங்கள் தன்னோடு வைத்துக் கொண்டு பிறகு சென்னை அனுப்பி வைத்துள்ளார். பழைய கசப்புகளை மறந்து மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளார்களாம்.
விவாகரத்துக்குப் பிறகு, பிள்ளைகளை மனைவியுடனே விட்டு வைத்திருந்தார் பிரபுதேவா என்பது குறிப்பிடத்தக்கது.