மீண்டும் மனைவியுடன் இணைகிறார் பிரபுதேவா?

By Shankar

Prabhu deva with his family
சென்னை: விவாகரத்து பெற்றுப் பிரிந்துவிட்ட தன் மனைவி ரம்லத்துடன் மீண்டும் இணைய முடிவெடுத்திருக்கிறார் பிரபுதேவா என தகவல் வெளியாகியுள்ளது.

பிரபுதேவா கடந்த வருடம் ஜூலை மாதம் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்தார். மனைவிக்கும், குழந்தைகளுக்கும் வீடுகள், சொத்துக்களை எழுதி வைத்து செட்டில் செய்தார். பின்னர் நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளத் தயாரானார். மும்பையில் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்தனர்.

நயன்தாரா சினிமாவுக்கு முழுக்கு போட்டார். இந்து மதத்துக்கும் மாறினார். ஆனால் திடீரென அவர்கள் திருமணம் நின்றது. காதலும் முறிந்தது.

பிரபு தேவா நம்பிக்கை துரோகம் செய்ததாக நயன்தாரா குற்றம்சாட்டினார்.

நயன்தாராவை பிரிந்த பிறகு மும்பையில் வீடு எடுத்து தங்கி இந்திப் படங்களை இயக்கி வந்தார். ஆனாலும் பிள்ளைகளைப் பார்க்க அடிக்கடி சென்னைக்கு வந்துவிடுகிறார் பிரபுதேவா.

சமீபத்தில் மனைவி ரம்லத்தை சந்தித்து அவர் பேசியதாகக் கூறப்படுகிறது. ரம்லத்தையும், குழந்தைகளையும் மும்பைக்கு அழைத்து சென்று சில தினங்கள் தன்னோடு வைத்துக் கொண்டு பிறகு சென்னை அனுப்பி வைத்துள்ளார். பழைய கசப்புகளை மறந்து மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளார்களாம்.

விவாகரத்துக்குப் பிறகு, பிள்ளைகளை மனைவியுடனே விட்டு வைத்திருந்தார் பிரபுதேவா என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X