Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வயசாகிடுச்சி... இனி எந்தப் பெண்ணுடனும் உறவில்லை! - பிரபு தேவா
சென்னை: எனக்கு வயசாகிவிட்டது. இனி எந்தப் பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்ள விரும்பவில்லை. என் மகன்கள்தான் இனி எல்லாமே, என்று கூறியுள்ளார் பிரபு தேவா.
இந்தியாவின் முன்னணி சினிமா இயக்குநராக உயர்ந்திருக்கும் பிரபு தேவாவின் காதல் கதைகள் நாடறிந்தவை.
ரம்லத் என்பவரை காதலித்து மணந்தார். மூன்று குழந்தைகள் பிறந்தன இருவருக்கும். மூவரில் ஒரு மகன் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டான்.
அப்போது ஆறுதல் சொல்ல வந்தார் நடிகை நயன்தாரா. அடுத்த சில மாதங்களில் இருவரும் காதலிப்பதாக செய்திகள். ஒரு நாள் அதை பிரபுதேவாவே ஒரு அறிவிப்பு மூலம் உறுதி செய்தார்.
நயன்தாராவைத் திருமணம் செய்வதற்காக ரம்லத்தை விவாகரத்தே செய்துவிட்டார் பிரபு தேவா. இந்தக் கதை ஒரு ஆண்டு முழுவதும் பரபரப்பாக ஓடியது.
ஒரு நாள் திடீரென கிறித்தவ மதத்திலிருந்து இந்துவாக மாறினார் நயன்தாரா. அடுத்த சில தினங்களில் இருவரும் திருமணம் செய்து கொண்டது போன்ற படங்கள் வெளியாகின.
ஆனால் சில மாதங்களில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்துவிட்டனர். பிரபுதேவா மும்பையில் செட்டிலாகிவிட்டார்.
மகன்களைப் பார்க்க மட்டும் அடிக்கடி சென்னை வந்து போகிறார். இனி தன் வாழ்க்கையை மகன்களுக்காக செலவிடப் போவதாகக் கூறி வருகிறார்.
இனி உங்கள் வாழ்க்கையில் வேறு பெண்ணுக்கு இடமில்லையா.. மனைவியுடன் மீண்டும் சேருவீர்களா என்று கேட்டபோது, "எந்த பெண்ணுடனும் எனக்கு உறவு இல்லை. 2 ஆண்டுகளாகத் தனியாகத்தான் இருக்கிறேன்.
எனக்கு நிறைய வேலைகள் உள்ளன. கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. இதில் பெண்களுடன் சுற்ற ஏது நேரம்?
எனக்கு இப்போது வயதாகி விட்டது. மிக சீக்கிரமே என் மகன்கள் கேர்ள் பிரண்டுகளோடு வரும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது," என்றார்.