பிரபு தேவா... அடுத்த காதலில் மும்முரம்?

நயன்தாராவுக்குப் பிறகு அவர் வாழ்க்கையில் இடம்பெற்றுவிட்ட ஒரு பெண்ணைப் பற்றித்தான் இப்போது வதந்திகள் வட்டமடிக்கின்றன. இவர் ஒரு நடிகையா என்றால், இருக்கலாம், என்கிறார்கள்.
பிரபுதேவா மும்பையில் குடியேறிய பிறகு அந்தப் பெண்ணுடன் நெருக்கமான உறவை மெயின்டெய்ன் பண்ணுவதாக மும்பை பத்திரிகைகளில் செய்திகள் வரத் தொடங்கியுள்ளன.
நயன்தாராவைப் பிரிந்த பிறகு, தன் மகன்களுடன் அதிக நேரத்தைச் செலவிடுவதாகக் கூறியிருந்தார் பிரபுதேவா. சமீபத்தில்கூட மகன்களுடன் வெளிநாடு போய் வந்தார். மகன் பிறந்த நாளை சென்னையில் கொண்டாடினார்.
இந்த நிலையில் இப்போது பிரபுதேவாவைப் பின்னிப் பிணைந்திருக்கும் அந்த புதிய காதலி குறித்த பரபரப்பு கிளம்பியுள்ளது.
இதுகுறித்து பிரபுதேவாவிடம் கேட்டபோது, அவர் பதிலேதும் சொல்லவில்லை. மறுப்பும் தெரிவிக்கவில்லை. இந்த உறவு இப்போது புதிதாக வந்ததில்லை என்றும், இதுகுறித்து ஏற்கெனவே நயன்தாராவுக்கும் தெரியும் என்றும் கூறுகிறார்கள்.
விஷயத்தை நயன்தாரா மூலம் கன்பர்ம் செய்ய சிலர் ஆர்வத்துடன் தொடர்பு கொண்டபோது, அவர் தொடர்பு எல்லைக்கு வெளியிலிருப்பதாக தகவல் கிடைத்ததாம்!


Click it and Unblock the Notifications











