10 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர்கள்- பிரபு, ஜெயம் ரவி , கீர்த்தி சுரேஷ்
கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, நடிகர் ஜெயம் ரவி, நடிகர் பிரபு, மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களும் ரூபாய் 10 லட்சமும் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
சென்னை: கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, நடிகர் ஜெயம் ரவி, நடிகர் பிரபு, மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களும் ரூபாய் 10 லட்சமும் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
கடந்த ஒரு மாதமாக கேரளத்தில் நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மழை பெய்தது. மழை ஏற்பட்ட பாதிப்பால் இதுவரை 346 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து பெய்து வரும் தொடர் கனமழையால் அம்மாநிலம் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
அது மட்டும் இல்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் எல்லா திசைகளில் இருந்தும் கோடிக்கணக்கான மக்கள். கேரளா மக்களுக்கு உதவி கரம் நீட்டி வருகின்றனர்.
அதேபோல் கேரள மக்களுக்கு பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், தமிழ் திரையுலகினரும் நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்து வருகின்றனர்.
தற்போது நடிகர் ஜெயம் ரவி 10 லட்சமும், நடிகர் பிரபு 10 லட்சமும், நடிகை கீர்த்தி சுரேஷ் 10 லட்சமும் நிதியுதவி வழங்கியுள்ளார்கள்.


Click it and Unblock the Notifications











