Don't Miss!
- News யாருக்கோ தூக்கம் போயிட்டுனு சொல்றாங்க.. ஸ்டாலின், உதயநிதிக்கு தான் தூக்கம் போய்விட்டு.. எடப்பாடி
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பிரபு சாலமன் இயக்கம் இந்திப் படம்!
கும்கி படத்திற்கு அப்புறம் 'கயல்' படத்தை இயக்கியிருந்தார் பிரபு சாலமன். அந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை! அதனால், ஏற்கனவே வெற்றி பெற்ற கும்கி படத்தின் பார்ட் டூ ஆரம்பித்தார். கும்கியில் யானை வரும் காட்சிகளை கம்ப்யூட்டர் கிராஃபிக்சில் பண்ணினது, பல இடங்களில் பொம்மையாக தெரிந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?!
அதனால் இந்தமுறை தாய்லாந்துக்குப் போய் ஒரிஜினல் யானைகளை வைத்து படமாக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் முதலில் பிரபு சாலமன் தனது மகனை ஹீரோவாக அறிமுகப் படுத்தப்போகிறார் என்று செய்தி உலாவியது. இப்போது இயக்குநர் லிங்குசாமியின் அண்ணன் மருமகன் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு முடிந்த நிலையில் பிரபு சாலமனுக்கு ஒரு இந்திப்பட வாய்ப்பு வந்திருக்கிறது. இந்தி வாய்ப்பை மிஸ் பண்ண முடியுமா? ஸோ, கும்கிக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு இந்திக்குப் போய்விட்டார் இயக்குநர். ஒரு காலத்தில் ராம நாராயணன் இயக்கத்தில் வெளியான 'ஆடிவெள்ளி' மாதிரியான பக்திக் கதையாம்.