Don't Miss!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- News சென்னையை சுற்றி 128 ரயில் நிலையங்களில் வருகிறது சூப்பர் வசதி.. இன்னும் 3 மாதத்தில் எல்லாமே மாறுது
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிரபு சாலமன் இயக்கம் இந்திப் படம்!
கும்கி படத்திற்கு அப்புறம் 'கயல்' படத்தை இயக்கியிருந்தார் பிரபு சாலமன். அந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை! அதனால், ஏற்கனவே வெற்றி பெற்ற கும்கி படத்தின் பார்ட் டூ ஆரம்பித்தார். கும்கியில் யானை வரும் காட்சிகளை கம்ப்யூட்டர் கிராஃபிக்சில் பண்ணினது, பல இடங்களில் பொம்மையாக தெரிந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?!
அதனால் இந்தமுறை தாய்லாந்துக்குப் போய் ஒரிஜினல் யானைகளை வைத்து படமாக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் முதலில் பிரபு சாலமன் தனது மகனை ஹீரோவாக அறிமுகப் படுத்தப்போகிறார் என்று செய்தி உலாவியது. இப்போது இயக்குநர் லிங்குசாமியின் அண்ணன் மருமகன் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு முடிந்த நிலையில் பிரபு சாலமனுக்கு ஒரு இந்திப்பட வாய்ப்பு வந்திருக்கிறது. இந்தி வாய்ப்பை மிஸ் பண்ண முடியுமா? ஸோ, கும்கிக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு இந்திக்குப் போய்விட்டார் இயக்குநர். ஒரு காலத்தில் ராம நாராயணன் இயக்கத்தில் வெளியான 'ஆடிவெள்ளி' மாதிரியான பக்திக் கதையாம்.