Don't Miss!
- News லோக்சபா தேர்தலில் அகிலேஷ் யாதவ் போட்டி.. கனோஜ் தொகுதியில் நாளை மனுத்தாக்கல்.. பின்னணியில் 2 காரணம்!
- Lifestyle கோடையில் செல்லப்பிராணிகளை பராமரிப்பது எப்படி ? இதோ டிப்ஸ்..!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Sports ரோஹித்துக்கு விசுவாசமாக இருந்த வீரரை அணியை விட்டே நீக்கிய ஹர்திக் பாண்டியா? கதறும் ரசிகர்கள்
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பிரபுதேவா, ரெஜினா கெஸன்ட்ரா இணையும் புதிய படத்தின் டைட்டில் இதுவா?
சென்னை : நடிகர் பிரபுதேவா இப்பொழுது பல படங்களில் ஹீரோவாக பிஸியாக நடித்து வருகிறார்
முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்த பொன்மாணிக்கவேல் திரைப்படம் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு இப்பொழுது நேரடியாக ஓடிடியில் வெளியாகி உள்ளது
இந்த நிலையில் பிரபுதேவா, ரெஜினா கெஸன்ட்ரா இணைந்து நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் இன்று மாலை அறிவிக்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
நீதிபதி அனுமதியளித்தும் வீட்டுக்குள் போக மறுத்த நடிகர் மன்சூரலிகான்
போலீஸ் அதிகாரியாக மிரட்டிய
நடனம்,நடிப்பு, இயக்கம் என பல திறமைகளை கொண்டுள்ள பிரபுதேவா தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார். பல எதார்த்தமான கதைகளில் நடித்து வந்த இவர் முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக மிரட்டிய படம் பொன் மாணிக்கவேல். நீண்ட காலமாக திரையரங்கில் வெளியாக காத்துக் கொண்டிருந்த இந்த திரைப்படம் ஒரு வழியாக நேரடியாக ஒடிடியில் வெளியிடப்பட்டது. நல்லா விமர்சனங்களை பெற்று வரும் பொன்மாணிக்கவேல் திரைப்படத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
வித்தியாசமான பல கெட்டப்புகளில்
இந்த நிலையில் திரிஷா இல்லனா நயன்தாரா , அன்பானவன் அசராதவன் அடங்காதவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா பஹீரா என்ற படத்தில் சைக்கோ கொலைகாரனாக நடித்துள்ளார். அழகான பெண்களை காதலித்து அவர்களை கொலை செய்யும் கொடூர சைக்கோவாக பிரபுதேவா இதில் நடித்திருக்கிறார். வித்தியாசமான பல கெட்டப்புகளில் தோன்றுகிறார். குறிப்பாக பெண் வேடத்தில் இவர் நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது. சுமார் 8 நடிகைகள் இதில் நடித்துள்ளனர்.
இயக்குனர் டான் சாண்டி இயக்கத்தில்
சமீபத்தில் ஹரிகுமார் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் தேள் படத்தின் அறிவிப்பு வெளியானதை அடுத்து இப்பொழுது மற்றுமொரு புதிய படத்தின் அறிவிப்பு வெளியாக உள்ளது. அதன்படி மகாபலிபுரம், கொரில்லா உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் டான் சாண்டி இயக்கத்தில் பிரபுதேவா, ரெஜினா கெஸன்ட்ரா இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் அனுசுயா, இளவரசு, உமா ரியாஸ், ஆர்யன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி.பிள்ளை தயாரித்திருக்கிறார். இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்
புதிய படத்தின் டைட்டில்
கடந்த சில மாதங்களாக சென்னை மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது காதல் கதை களமாக உருவாகியுள்ள இப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது. அதன்படி பிரபுதேவா ரெஜினா கெஸன்ட்ரா இணையும் புதிய படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு "பிளாஷ்பேக்" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் கசிந்துள்ளது.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!