Don't Miss!
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Finance பெங்களூர் தண்ணீர் பஞ்சத்தில் இப்படியொரு பிரச்சனையா..? அதிர்ச்சியான விஷயம் தான்..!
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மணிரத்னம் புதிய படம் தொடக்கம்... பிரகாஷ் ராஜும் இணைந்தார்!
‘கடல்' படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு திங்கள்கிழமை தொடங்கியது.
இந்தப் படத்தில் நாயகனாக துல்கர் சல்மான் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பல முன்னணி நடிகைகளை தேர்வு செய்யப்பட்டு கடைசியாக நித்யா மேனன் தேர்வாகியுள்ளார்.
பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவை செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார். இவர் மணிரத்னம் படத்தில் நடிப்பது இது நான்காவது முறையாகும்.
மணிரத்னம் இயக்கத்தில் ‘பாம்பாய்', ‘இருவர்', ‘கன்னத்தில் முத்தமிட்டால்' ஆகிய படங்களில் ஏற்கெனவே நடித்துள்ளார்.
இது குறித்து பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், "சூப்பர் சூப்பர், மணிரத்னம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன். எனது கேரக்டரையும், கதையையும் மணிரத்னம் விளக்கிச் சொன்னார். சந்தோஷமாக இருந்தது," என்று குறிப்பிட்டுள்ளார்.