Don't Miss!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- News எனக்கே ஸ்கெட்சா? தமிழக காங்கிரஸ் கமிட்டியில் தகராறு..தூக்கியடிக்கப்படும் தலைகள்! இவர் தான் காரணமா?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இவ்வளவு ஈசியா EPF பாஸ்புக் டவுன்லோட் செய்ய முடியுமா.. சிம்பிள் ஸ்டெப்ஸ்!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே அணியில் குளறுபடி.. தீபக் சாஹரை நம்பாத ருதுராஜ்.. தோல்விக்கு காரணமே இதுதான்
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இப்படி பொறுப்பில்லாமல் பேசலாமா சரத்குமார்? - பிரகாஷ் ராஜ்
சேலம்: தலைமைப் பொறுப்பில் உள்ள சரத்குமார் பொறுப்பில்லாமல் பேசக் கூடாது என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறினார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் அக்டோபர் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதையொட்டி சேலம், நாமக்கல்லில் உள்ள நாடக நடிகர் சங்க உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பொன்வண்ணன், கருணாஸ், சரவணன், அஜய்ரத்னம், மனோபாலா உள்ளிட்டோர் சனிக்கிழமை சேலம் வந்தனர்.
சேலத்தில் உள்ள நாடக நடிகர் சங்க உறுப்பினர்களைச் சந்தித்து விஷால், நாசர் தலைமையிலான அணிக்கு ஆதரவு தரும்படி கோரினர்.
இதைத்தொடர்ந்து, நடிகர் பிரகாஷ்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியது:
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாடக நடிகர்களிடம் ஆதரவு திரட்டி வருகிறோம். யாரையும் குறைகூற இங்கு வரவில்லை. நடிகர் சங்கத் தேர்தல் மூலம் மாற்றம் வர வேண்டும்.
சரத்குமார் எனது நண்பர். ஆனால், அவர் தவறான இடத்தில் உள்ளார். எதிரணியினர் அரசியல், சாதியைப் புகுத்துகின்றனர். கலைஞர்களுக்கு சாதி, மத பாகுபாடு கிடையாது.
நடிகர் சங்கத் தேர்தலில் புரட்சி ஆரம்பிக்க இவ்வளவு ஆண்டுகள் ஆகியுள்ளது. மேலும், மாற்றத்துக்கான தேவை ஏற்பட்டுள்ளது.
தேர்தலுக்குப் பிறகு ஒற்றுமை இருக்காது என சரத்குமார் கூறுவது அநாகரிகமானது. நமக்குள் ஒற்றுமை இல்லாமல் வாழ முடியாது. மேலும், தலைமைப் பொறுப்புகளில் உள்ளவர்கள் பொறுப்பில்லாமல் பேசக்கூடாது. அதேபோல, சங்க உறுப்பினர்களை பயமுறுத்தக்கூடாது.
நடிகர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு கேள்விக் கேட்கும் உரிமை உண்டு. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞர்கள் கேள்வி கேட்கின்றனர். அப்படியானால் ஏதோ நடக்கிறது என்றுதானே அர்த்தம். நான் யாருக்கும் பயப்படவில்லை. எனக்குப் பதவி வேண்டாம். ஆனால், நடிகர் சங்கத்தில் தவறு செய்தால் தட்டிக் கேட்பேன். இந்தத் தேர்தல் நடிகர் சங்கத் தேர்தலை மாற்றக்கூடியது. ஒன்றுசேர்ந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்."
நடிகர் கருணாஸ் பேசுகையில், நடிகர் சங்கத் தேர்தலில் நாடக நடிகர்கள் தபால் வாக்கு அளிக்காமல் சென்னைக்கு வந்து வாக்களிக்க வேண்டும். மேலும், உறுப்பினர் அடையாள அட்டையை மிரட்டி வாங்கி வைத்திருக்கின்றனர் என்றார்.