Don't Miss!
- News போலி பத்திரங்களை ரத்து செய்ய முடியுமா, முடியாதா? உயர்நீதிமன்ற உத்தரவால் ஏற்பட்ட மாற்றம் என்ன?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஒரு ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்த பிரகாஷ்ராஜ்!
Recommended Video
பெங்களூர் : கர்நாடக மாநிலம், மைசூர் தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. பிரதாப் பிம்ஹா, கடந்த ஆண்டு பிரகாஷ் ராஜ் குறித்து ட்விட்டரில் அவதூறான கருத்தை பதிவிட்டிருந்தார்.
அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நடிகர் பிரகாஷ் ராஜ், விளக்கம் கேட்டு பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதற்கு அவர் பதிலளிக்கவில்லை.
இந்நிலையில், தன்னைப் பற்றி அவதூறாக கருத்து பதிவிட்ட பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா மீது ஒரு ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பிரகாஷ்ராஜ் மானநஷ்ட வழக்கு பதிவு செய்துள்ளார்.
அவதூறு பேச்சு
பிரகாஷ்ராஜ் ஆளும் பா.ஜ.க-வை அதிகமாக விமர்சித்து வருகிறர். இதனால், பா.ஜ.க-வினர் பிரகாஷ்ராஜ் மீது கோபத்தில் இருந்து வருகின்றனர். மைசூர் எம்.பி பிரதாப் சிம்ஹா 'பிரகாஷ்ராஜ் தன் மகன் இறந்த துக்கத்திலும் மனைவியை விட்டுவிட்டு டான்ஸ் ஆடுபவரோடு குடும்பம் நடத்தியவர்' என்று கூறியிருந்தார்.
பிரகாஷ்ராஜ் கோபம்
பாஜக எம்.பி தனது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை விமர்சித்தது பிரகாஷ்ராஜை கோபப்படுத்தியது. 'தர்க்க ரீதியாக எனக்கு பதில் சொல்ல முடியாதவர்கள் என் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கிறார்கள்' என்றார். மைசூர் எம்.பி பிரதாப் சிம்ஹாவுக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பினார்.
பதில் இல்லை
ஆனால், பிரகாஷ்ராஜ் அனுப்பிய நோட்டீசுக்கு, பிரதாப் சிம்ஹா எந்தவித பதிலும் அனுப்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதாப் சிம்ஹா மீது மைசூர் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஒரு ரூபாய் நஷ்ட ஈடு
அதில் தன்னைப் பற்றி அவதூறான கருத்தை பதிவிட்ட பிரதாப் சிம்ஹா, உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும். தவிர, தனக்கு நஷ்ட ஈடாக ஒரு ரூபாய் மட்டும் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.