Don't Miss!
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- News "வேட்புமனு தாக்கல் போதே குழப்பம் இருந்தது.." வெடித்த சர்ச்சைக்கு.. அண்ணாமலை தந்த பரபர விளக்கம்!
- Sports எழுதி வச்சிக்கோங்க! ஆளே மாறிட்டான்..நிச்சயம் பெரிய ஆளா வருவான்.. 22 வயது வீரரை பாராட்டிய சூர்யகுமார்
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
வளரவே இல்லை, அதற்குள் அஜீத் மாதிரி செய்வதா?: வாரிசு நடிகரை விமர்சிக்கும் திரையுலகம்
Recommended Video
திருவனந்தபுரம்: மோகன்லாலின் மகன் பிரனவ் செய்துள்ள காரியத்தை பற்றி தான் மலையாள திரையுலகில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மகன் பிரனவ் கேமராவுக்கு பின்னால் இருக்க ஆசைப்பட்டார். கமல் ஹாஸனின் பாபநாசம், லைப் ஆஃப் ஜோசுட்டி ஆகிய படங்களில் துணை இயக்குனராக பணியாற்றினார்.
இந்நிலையில் அவர் ஆதி படம் மூலம் ஹீரோவாகியுள்ளார். ஆதி படத்தை பாபநாசம் பட இயக்குனர் ஜீத்து ஜோசப் தான் இயக்கியுள்ளார்.
ரிலீஸ்
பிரனவ் மோகன்லால் ஹீரோவாக நடித்துள்ள ஆதி படம் நாளை ரிலீஸாகிறது. ஆனால் பிரனவோ பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மறுத்துள்ளார்.
பேட்டி
படம் குறித்து பேட்டி எதுவும் கொடுக்க மாட்டேன். படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டேன் என்று அவர் கறாராக தெரிவித்துவிட்டார்.
பயணம்
ஆதி படம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில் பிரனவ் இமய மலைக்கு கிளம்பிச் சென்றுவிட்டார். பயணம் செய்வது என்றால் பிரனவுக்கு மிகவும் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வளர்ச்சி
தல அஜீத் மாதிரி பட விளம்பரத்திற்கு வர மாட்டேன், பேட்டி கொடுக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறாரே பிரனவ் என்று மலையாள திரையுலகில் பேசிக் கொள்கிறார்கள்.
கூச்சம்
பிரனவ் இயற்கையாகவே கூச்ச சுபாவம் உள்ளவர். முதல் படம் என்பதால் எதையாவது பேசி படத்திற்கு பாதிப்பு வந்துவிடுமோ என்ற பயத்தால் கூட அவர் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.