Don't Miss!
- News தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்.. தஞ்சாவூர் மாவட்டம் முழுக்க இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Lifestyle ஆண்களே! அனைத்து பெண்களுக்கும் உங்கள பிடிக்கணுமா? அப்ப சாணக்கியர் சொல்லும் இந்த 6 குணங்களை வளர்த்துக்கோங்க!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வளரவே இல்லை, அதற்குள் அஜீத் மாதிரி செய்வதா?: வாரிசு நடிகரை விமர்சிக்கும் திரையுலகம்
Recommended Video
திருவனந்தபுரம்: மோகன்லாலின் மகன் பிரனவ் செய்துள்ள காரியத்தை பற்றி தான் மலையாள திரையுலகில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மகன் பிரனவ் கேமராவுக்கு பின்னால் இருக்க ஆசைப்பட்டார். கமல் ஹாஸனின் பாபநாசம், லைப் ஆஃப் ஜோசுட்டி ஆகிய படங்களில் துணை இயக்குனராக பணியாற்றினார்.
இந்நிலையில் அவர் ஆதி படம் மூலம் ஹீரோவாகியுள்ளார். ஆதி படத்தை பாபநாசம் பட இயக்குனர் ஜீத்து ஜோசப் தான் இயக்கியுள்ளார்.
ரிலீஸ்
பிரனவ் மோகன்லால் ஹீரோவாக நடித்துள்ள ஆதி படம் நாளை ரிலீஸாகிறது. ஆனால் பிரனவோ பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மறுத்துள்ளார்.
பேட்டி
படம் குறித்து பேட்டி எதுவும் கொடுக்க மாட்டேன். படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டேன் என்று அவர் கறாராக தெரிவித்துவிட்டார்.
பயணம்
ஆதி படம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில் பிரனவ் இமய மலைக்கு கிளம்பிச் சென்றுவிட்டார். பயணம் செய்வது என்றால் பிரனவுக்கு மிகவும் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வளர்ச்சி
தல அஜீத் மாதிரி பட விளம்பரத்திற்கு வர மாட்டேன், பேட்டி கொடுக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறாரே பிரனவ் என்று மலையாள திரையுலகில் பேசிக் கொள்கிறார்கள்.
கூச்சம்
பிரனவ் இயற்கையாகவே கூச்ச சுபாவம் உள்ளவர். முதல் படம் என்பதால் எதையாவது பேசி படத்திற்கு பாதிப்பு வந்துவிடுமோ என்ற பயத்தால் கூட அவர் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.