Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
உள்ளத்தில் நல்ல உள்ளம்.. ஒன்றல்ல, இரண்டல்ல 75 ஆயிரம் உணவுகள்.. நடிகை பிரணிதா தாராளம்!
உள்ளத்தில் நல்ல உள்ளம்.. ஒன்றல்ல, இரண்டல்ல 75 ஆயிரம் உணவுகள்.. நடிகை பிரணிதா தாராளம்!
ஹைதராபாத்: கொரோனா பாதிப்பால் உணவின்றி தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு நடிகை பிரணிதா 75 ஆயிரம் உணவு பொட்டலங்களை இதுவரை வழங்கி உள்ளார்.
Recommended Video
பெங்களூரை சேர்ந்த பிரணிதா 2010ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான பொருக்கி எனும் படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார்.
தொடர்ந்து சில தெலுங்கு படங்களில் நடித்து வந்த பிரணிதா தமிழில் கார்த்தியின் சகுனி படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
காமெடியில் இது வேற வகையாம்..மீண்டும் மிரட்ட வரும் பேய்ப்படம்.. இதுக்கு ஏன் இப்படியொரு டைட்டில்?
சூர்யா, கார்த்தி
ஷங்கர் தயாள் இயக்கத்தில் 2012ம் ஆண்டு கார்த்தி, சந்தானம் நடிப்பில் வெளியான சகுனி படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த பிரணிதா, அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா நடிப்பில் வெளியான மாசு என்கிற மாசிலாமணி படத்தில் பிளாஷ்பேக்கில் வரும் மனைவியாக நடித்திருப்பார்.
பிளாக்பஸ்டர்
தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான அத்தாரண்டிகி தாரேதி படத்தில் நாயகியாக சமந்தா நடித்திருப்பார். மாமா பெண் கதாபாத்திரத்தில் நடிகை பிரணிதா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தெலுங்கில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன அந்த படத்தை கடந்த ஆண்டு சிம்பு நடிப்பில் வந்தா ராஜாவா வருவேன் என்ற படமாக சுந்தர்.சி இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமும் உணவு
ஆனால், கொரோனா தாக்கம் அவர் நினைப்பது போல, இந்தியர்களை அவ்வளவு லேசாக விட்டு விடவில்லை. கொரோனாவின் பாதிப்பு அதிகரித்த நிலையில், லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. கடந்த 21 நாட்களாக தினமும் பசியால் வாடும் பல்லாயிரக் கணக்கான நபர்களுக்கு உணவு சமைத்து, வழங்கி வருகிறார் பிரணிதா.
75000 உணவு பொட்டலங்கள்
ஒர்க்கவுட் செய்வது, கிளாமர் புகைப்படங்களை பதிவிடுவது என இந்த லாக்டவுன் நேரத்தில் பொழுது போகாமல் பல ஹீரோயின்கள் பெட்ரூமிலே கிடக்கும் நிலையில், சில ஹீரோயின்கள் முன்வந்து கொரோனா உதவிகளை செய்து வருகின்றனர். அதிலும், நடிகை பிரணிதா இதுவரை 75 ஆயிரம் பேருக்கு உணவு அளித்திருப்பது என்பது அவரது நல்ல உள்ளத்தையே காட்டுகிறது.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்