Don't Miss!
- News "பேசுவதை எல்லாம் ஒட்டு கேக்குறாங்க.. இதனால நான் செல்போனை யூஸ் பண்றதே இல்லை.." ஹெச்.ராஜா பகீர் புகார்
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
7 பீரோக்களில் 160 பொருட்கள்.. இசை அமைப்பாளர் இளையராஜாவிடம் ஒப்படைத்தது பிரசாத் ஸ்டூடியோ!
சென்னை: இளையராஜாவுக்கு சொந்தமான பொருட்களை பிரசாத் ஸ்டூடியோ நிறுவனம் அவருக்கு வழங்கிவிட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இசையமைப்பாளர் இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோவின் ஒரு பகுதியில் தனது ரெக்கார்டிங் ஸ்டூடியோவை சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வந்தார்.
அதிர்ச்சி.. பிக்பாஸ் அனிதாவின் அப்பா திடீர் மரணம்.. மகளை பார்க்காமல் ரயிலிலேயே உயிர்பிரிந்த சோகம்!
இங்கிருந்துதான் நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கு அவர் இசை அமைத்திருந்தார்.
வாடகை விவகாரம்
அங்கு அவருக்கு ஐந்து அறைகள் இருந்துள்ளன. வாடகை விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துக்கும் இளையராஜாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதனால், அவரை காலி செய்யுமாறு பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் வலியுறுத்தியது.
போலீசில் புகார்
இதையடுத்து தன்னை பணியாற்ற விடாமல் இடையூறு செய்வதாக, போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார் இளையராஜா. பின்னர், பிரசாத் ஸ்டூடியோவில் தான் வைத்திருக்கும் பொருட்களையும், இசைக் குறிப்புகளையும் எடுத்துக் கொள்ள அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்குத் தொடர்ந்தார்.
நிர்வாகம் முடிவு
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருதரப்பும் சமரசமாகச் செல்லும்படி அறிவுறுத்தியது. அதன்படி இளையராஜாவை பிரசாத் ஸ்டூடியோவுக்குள் அனுமதிக்க நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து இளையராஜா தரப்பு வழக்கறிஞர்கள், பிரசாத் ஸ்டூடியோவுக்கு நேற்று சென்று பார்த்தனர்.
மன வருத்தம்
அப்போது அவருடைய பொருட்கள் ஏதும் இல்லை என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது. அவருடைய பொருட்களை குப்பை போல போட்டு வைத்திருப்பதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதனால் மன வருத்தம் அடைந்த இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோவுக்கு வரவில்லை.
160 பொருட்கள்
இந்நிலையில், நீதிமன்றம் நியமித்த ஆணையர்களிடம், இளையராஜா அங்கு வைத்திருந்த பொருட்களின் பட்டியல் கொடுக்கப்பட்டது. அந்தப் பட்டியல் சரிபார்க்கப்பட்டு, பின்னர் அந்த பொருட்கள் எடுக்கப்பட்டது. ஏழு பீரோக்களில் 160 பொருட்கள் இளையராஜா தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!