Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிரசாந்த்துக்கு கோர்ட் நோட்டீஸ்
கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கிரகலட்சுமி தாக்கல் செய்துள்ள மனுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்குமாறு நடிகர் பிரசாந்த்துக்கு சென்னை குடும்ப நலநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் பிரசாந்த் சமீபத்தில் குடும்ப நல நீதிமன்றத்தில் தன்னை விட்டுப் பிரிந்து சென்றமனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கோரி மனு தாக்கல் செய்தார்.இதையடுத்து கிரகலட்சுமி தாக்கல் செய்த பதில் மனுவில் தனக்கு மாதந்தோறும் ரூ. 1லட்சம் ஜீவனாம்சம் தருமாறு கோரியிருந்தார்.
இதையடுத்து இருவரையும் சமரச மையத்தில் ஆலோசனை பெற்று வருமாறுநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இருவரையும் அழைத்து சமரச மையம்பேச்சுவார்த்தை நடத்தியது.
இதைத் தொடர்ந்து தனது கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், பொங்கல்பண்டிகையை பிரசாந்த்துடன் சேர்ந்து கொண்டாட விரும்புவதாகவும் கூறி கிரகலட்சுமிமனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது பிரசாந்த் ஆஜராகவில்லை. அவர்படப்பிடிப்பு தொடர்பாக டெல்லி சென்றிருப்பதாக நீதிபதி ஆறுமுகத்திடம்தெரிவிக்கப்பட்டது.
கிரகலட்சுமி தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறிபிரசாந்த்துக்கு நோட்டீஸ் அனுப்ப அவர் உத்தரவிட்டார். இன்று பிரசாந்த் நேரில்ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.