Don't Miss!
- News கிளாம்பாக்கத்தில் அலைமோதிய கூட்டம்.. நள்ளிரவில் திடீரென போராட்டத்தில் குதித்த பயணிகள்
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிரஷாந்த்-கிரகலட்சுமி
நடிகர் பிரஷாந்த் மற்றும் அவரது மனைவி கிரகலட்சுமி ஆகிய இருவர் தொடர்பான வழக்கில் இன்று இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிகிறது.
நடிகர் பிரஷாந்த் மற்றும் அவரது மனைவி கிரகலட்சுமி ஆகியோரின் வழக்கு வரும் ஜூன் மாதம் 18ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.நடிகர் பிரஷாந்த்தும், அவரது மனைவி கிரகலட்சுமியும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். தன்னுடன் வந்து தனது மனைவி குடும்பம் நடத்த உத்தரவிடக் கோரி குடும்ப நல நீதிமன்றத்தை அணுகினார் பிரஷாந்த்.
இதுதொடர்பாக கிரகலட்சுமிக்கு நோட்டீஸ் அனுப்பியது குடும்ப நீதிமன்றம். பின்னர் அவர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இருவரையும் நேரில் அழைத்து குடும்ப நல நீதிமன்றம் ஆலோசனை வழங்கியது. இதன் எதிரொலியாக பிரஷாந்த்துடன் சேர்ந்து குடும்பம் நடத்த கிரகலட்சுமி சம்மதம் தெரிவித்தார்.
இருப்பினும் இதுதொடர்பாக இழுபறி நீடித்து வந்தது. இதையடுத்து நீதிபதி தேவதாஸ் பிரஷாந்தும், கிரகலட்சுமியும் தங்களது நிலையை ஏப்ரல் 23ம் தேதி தெரிவிக்க வேண்டும் உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பிரஷாந்த்தும், கிரகலட்சுமியும் நேரில் ஆஜராகினர். அவர்களிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.
ஆனால் இந்த விசாரணையில் எந்த முடிவும் ஏற்படவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூன் 18ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.