Don't Miss!
- News இப்படி நடக்கும்னு யாருமே எதிர்பார்க்கல.. நெல்லையில் "லம்ப்"பாக வாரி இறைத்த "தலை".. பலன் கிடைக்குமா?
- Automobiles பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
கொரோனா பொது நிவாரணம்….. பிரஷாந்த் அவரது தந்தை தியாகராஜன் ரூ.10 லட்சம் நிதி !
சென்னை : நடிகர் பிரஷாந்த் மற்றும் அவரது தந்தை தியாகராஜன் முதல்வரை சந்தித்து ரூ 10 லட்சம் கொரோனா நிதி அளித்தனர்.
Recommended Video
கொரோனா காலத்தில் முதலமைச்சரின் வேகம் சிறப்பாக உள்ளதோடு, செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக அவர்கள் கூறினர்.
6 மணிக்கு எல்லாருக்கும் சர்ப்பிரைஸ் இருக்கு... பிறந்தநாளில் ஹரீஷ் கல்யாண் வைத்த ட்விஸ்ட்
இச்சந்திப்பு மரியாதை நிமிர்த்தமான சந்திப்பு என்றும் முதலமைச்சரை சந்தித்ததில் மகிழ்ச்சி என்றும் அவர்கள் கூறினர்.
தாராள நிதி உதவி
கொரோனா பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக அளவில் நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழக்குமாறு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வேண்டுகோளை ஏற்று அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபல தொழிற்துறை நிறுவனங்கள், திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.
நடிகர் நடிகைகள் நிதி
நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் முதலாக வந்து ரூ 1 கோடி நிதி உதவி அளித்தனர். நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம், விக்ரம் ரூ30 லட்சம், நடிகர் அஜித், உதயநிதி ஸ்டாலின் . சிவகார்த்திகேயன் தலா 25 லட்சமும், இயக்குனர் ஷங்கர், வெற்றிமாறன், மோகன்ராஜா ஆகியோர் தலா ரூ 10 லட்சமும் அளித்தனர்.
ரூ 10 லட்சம்
அந்த வகையில் நடிகர் பிரஷாந்த்தும், அவரது தந்தை இயக்குநர் தியாகராஜனும் முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ10 லட்சம் நிதி வழங்கியுள்ளனர். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த இவர்கள், இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினர். மேலும் கொரோனாவிற்கான முதலமைச்சர் பொது நிவாரண நிதியாக ரூ 10 லட்சம் நிதி வழங்கியதாகவும் கூறினர்.
சந்தித்ததில் மகிழ்ச்சி
இந்த கொரோனா காலத்தில் முதலமைச்சரின் வேகம் சிறப்பாக உள்ளதோடு, செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது. மிகவும் கடினமாக உழைத்து வருகிறார் என்றும், கலைஞரை பார்ப்பது போலவே உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்ததில் மகிழ்ச்சி என்றனர். முதலமைச்சர் ஸ்டாலினை வெகுவாக பாராட்டினர்.