Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
போதைப் பொருளுக்கு அடிமையான ஏமி ஜாக்சனின் முன்னாள் காதலரான வாரிசு நடிகர்
மும்பை: நடிகை ஏமி ஜாக்சனின் முன்னாள் காதலரும், நடிகருமான பிரத்தீக் பாபர் போதைப் பொருளுக்கு அடிமையாகி அதில் இருந்து மீண்டு வருகிறார்.
ஜானே து யா ஜானே நா படம் மூலம் நடிகரானவர் பிரத்தீக் பாபர். பிரபல நடிகர் ராஜ் பாபர், நடிகை ஸ்மிதா பாட்டிலின் மகன். விண்ணைத் தாண்டி வருவாயா இந்தி ரீமேக்கில் சிம்பு கதாபாத்திரத்தில் நடித்தவர் பிரத்தீக். த்ரிஷா கதாபாத்திரத்தில் ஏமி ஜாக்சன் நடித்தார்.
இந்த படத்தில் நடிக்கும்போது அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. பிரத்தீக்கின் பெயரை கையில் பச்சை குத்தினார் ஏமி. பின்னர் பிரத்தீக்கும், ஏமியும் பிரிந்துவிட்டனர். அதன் பிறகு பிரத்தீக் போதைப் பொருளுக்கு அடிமையாகிவிட்டார். இது குறித்து அவர் கூறுகையில்,
போதைப் பொருள்
நான் போதைப் பொருளுக்கு அடிமையானேன். அதில் இருந்து வெளியே வர போராடிக் கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கையின் உண்மை பற்றி ரசிகர்களுக்கு தெரிய வேண்டும் என்றே இதை வெளிப்படையாக கூறுகிறேன்.
குற்ற உணர்ச்சி
போதைக்கு அடிமையாகியும் நம்மை சுற்றியுள்ளவர்கள் அளவு கடந்த அன்பை காட்டுவது குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது. நான் படங்களில் நடிக்காமல் இருந்த இத்தனை ஆண்டுகள் நான் மகிழ்ச்சியாக இருப்பதாக அனைவரும் நினைக்கிறார்கள்.
பிரச்சனை
நான் மகிழ்ச்சியாக இல்லை. எனக்கு நானே உண்மையாக இல்லை. போதைப் பொருளுக்கு அடிமையாக இருந்தேன். அது பெரிய பிரச்சனை. நான் ஒன்றும் உத்தமன் அல்ல என்பது ரசிகர்களுக்கு தெரிய வேண்டும்.
புத்தகம்
போதைப் பொருளுக்கு அடிமையாகி மீண்டு வருவது குறித்து நான் பலரிடம் கூறியுள்ளேன். அனைவரும் எனக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள். இது குறித்து புத்தகம் எழுதும் திட்டம் உள்ளது என்றார் பிரத்தீக்.