Don't Miss!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
போதைப் பொருளுக்கு அடிமையான ஏமி ஜாக்சனின் முன்னாள் காதலரான வாரிசு நடிகர்
மும்பை: நடிகை ஏமி ஜாக்சனின் முன்னாள் காதலரும், நடிகருமான பிரத்தீக் பாபர் போதைப் பொருளுக்கு அடிமையாகி அதில் இருந்து மீண்டு வருகிறார்.
ஜானே து யா ஜானே நா படம் மூலம் நடிகரானவர் பிரத்தீக் பாபர். பிரபல நடிகர் ராஜ் பாபர், நடிகை ஸ்மிதா பாட்டிலின் மகன். விண்ணைத் தாண்டி வருவாயா இந்தி ரீமேக்கில் சிம்பு கதாபாத்திரத்தில் நடித்தவர் பிரத்தீக். த்ரிஷா கதாபாத்திரத்தில் ஏமி ஜாக்சன் நடித்தார்.
இந்த படத்தில் நடிக்கும்போது அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. பிரத்தீக்கின் பெயரை கையில் பச்சை குத்தினார் ஏமி. பின்னர் பிரத்தீக்கும், ஏமியும் பிரிந்துவிட்டனர். அதன் பிறகு பிரத்தீக் போதைப் பொருளுக்கு அடிமையாகிவிட்டார். இது குறித்து அவர் கூறுகையில்,
போதைப் பொருள்
நான் போதைப் பொருளுக்கு அடிமையானேன். அதில் இருந்து வெளியே வர போராடிக் கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கையின் உண்மை பற்றி ரசிகர்களுக்கு தெரிய வேண்டும் என்றே இதை வெளிப்படையாக கூறுகிறேன்.
குற்ற உணர்ச்சி
போதைக்கு அடிமையாகியும் நம்மை சுற்றியுள்ளவர்கள் அளவு கடந்த அன்பை காட்டுவது குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது. நான் படங்களில் நடிக்காமல் இருந்த இத்தனை ஆண்டுகள் நான் மகிழ்ச்சியாக இருப்பதாக அனைவரும் நினைக்கிறார்கள்.
பிரச்சனை
நான் மகிழ்ச்சியாக இல்லை. எனக்கு நானே உண்மையாக இல்லை. போதைப் பொருளுக்கு அடிமையாக இருந்தேன். அது பெரிய பிரச்சனை. நான் ஒன்றும் உத்தமன் அல்ல என்பது ரசிகர்களுக்கு தெரிய வேண்டும்.
புத்தகம்
போதைப் பொருளுக்கு அடிமையாகி மீண்டு வருவது குறித்து நான் பலரிடம் கூறியுள்ளேன். அனைவரும் எனக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள். இது குறித்து புத்தகம் எழுதும் திட்டம் உள்ளது என்றார் பிரத்தீக்.