Don't Miss!
- News முஸ்லீம்.. ஹனுமான்.. லோக்சபா தேர்தலில் பிரச்சார ஸ்டைலை மாற்றிய மோடி.. பாஜக எடுத்த "அஸ்திரம்"
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி.. OTP மோசடி-க்கு முடிவு..!!
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விடுமுறையை கழிக்க வந்த இடத்தில் 2 வயது மகள் இறந்தது எப்படி?: நடிகர் விளக்கம்
மும்பை: தனது 2 வயது மகள் இறந்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார் தொலைக்காட்சி நடிகர் பிரதிஷ் வோரா.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் பிரதிஷ் வோராவின் 2 வயது மகள் பிளாஸ்டிக் பொம்மையை விழுங்கி மூச்சு திணறி உயிர் இழந்தார். இதையடுத்து குழந்தையின் உடல் மும்பையில் இருந்து ராஜ்கோட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச் சடங்கு செய்யப்பட்டது.
இது குறித்து பிரதிஷ் தற்போது பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,
சர்ச்சை நடிகையை காலி செய்ய நினைத்து சூடுபட்ட 2 நடிகைகள்
ராஜ்கோட்
நான் மட்டும் தான் மும்பையில் தங்கி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறேன். என் மனைவியும், மகளும் ராஜ்கோட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் விடுமுறைக்காக அவர்கள் மும்பைக்கு வந்தனர். கடந்த 10 நாட்களாக அவர்கள் மும்பையில் இருந்தனர்.
பொம்மை
கடந்த 7ம் தேதி இரவு நண்பர்கள் வீட்டிற்கு வந்தனர். நாங்கள் அனைவரும் பீட்சா சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். என் மகள் பொம்மையில் உள்ள சின்ன பிளாஸ்டிக் கியூபை விழுங்கினார். அதை பார்த்த நான் உடனே அதை வெளியே எடுக்க அவரின் வாயில் கையை விட்டேன். ஆனால் அவர் என்னை கடித்துவிட்டார்.
மரணம்
என் மகள் என்னை வலுவாக கடித்ததுடன் வாயில் இருந்து பொம்மையை எடுக்க ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அதனால் என்னால் அந்த பொம்மையை வெளியே எடுக்க முடியவில்லை. உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு நிலைமை சீரானது. பிறகு இரவு 1 மணி அளவில் என் மகளின் நிலைமை மோசமாகி உயிர் இழந்துவிட்டார்.
வேலை
என் மனைவியை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு என்னுடையது. அவர் தைரியமானவர். இந்த துக்கத்தில் இருந்து அவர் தான் முதலில் வெளியே வருவார். அவர் ஏற்கனவே வேலைக்கு செல்லத் துவங்கிவிட்டார். நான் இன்னும் சில நாட்கள் ராஜ்கோட்டில் இருந்துவிட்டு பின்னர் மும்பை செல்வேன். எங்கள் மகள் பிறந்த பிறகே எனக்கும், மனைவிக்கும் வேலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் இறந்துவிட்டாலும் எங்களுடன் இருப்பது போன்றே உள்ளது என்கிறார் பிரதிஷ்.