Don't Miss!
- News 8 வருஷமாக கட்டப்பட்டு வந்த பாலம்.. வேகமா காற்றடித்ததில் உடைந்து விழுந்தது.. தெலுங்கானாவில்
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பிரதியுஷா தற்கொலை வழக்கு: காதலன் ராகுல் சிங்குக்கு முன்ஜாமீன் வழங்கி மும்பை ஐகோர்ட் உத்தரவு
மும்பை: டிவி நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கில் அவரது காதலன் ராகுல் சிங்குக்கு முன்ஜாமீன் வழங்கி, மும்பை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டிவி நடிகை பிரதியுஷா சமீபத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரதியுஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலன் ராகுல் சிங் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தன்னைப் போலீசார் கைது செய்யக் கூடாது என மும்பை ஐகோர்ட்டில் ராகுல் சிங் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் ராகுல் சிங்கின் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி "மனுதாரருக்கும் (ராகுல்சிங்), பிரதியுஷாவுக்கும் இடையே வாக்குவாதம் இருந்தது சாட்சிகளின் வாக்குமூலம் மூலம் தெரியவருகிறது.
அதேசமயம், பிரதியுஷாவை தற்கொலைக்கு தூண்டியதற்கான எந்தவொரு முதல் நிலை ஆதாரமும் இல்லை" என்று தீர்ப்புக் கூறி ராகுலுக்கு முன்ஜாமீன் வழங்கிட உத்தரவு பிறப்பித்தார்.
ராகுல் சிங்-பிரதியுஷாவின் கடைசி தொலைபேசி உரையாடலை முழுமையாகக் கேட்ட பின்னர் நீதிபதி தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.