Don't Miss!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு.. பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது
- Sports சிஎஸ்கே இம்முறை கோப்பையை மறந்திட வேண்டியது தான்.. 19 பந்தில் 16 ரன்கள்.. ஜடேஜா ஆடிய டெஸ்ட் இன்னிங்ஸ்
- Finance மாலத்தீவு தேர்தல்: இந்தியாவுக்கு மீண்டும் ஒரு தலைவலி..!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எழுந்து நின்று பாடாததால் 8 மாத கர்ப்பமாக இருந்த பாடகி சுட்டுக் கொலை
Recommended Video
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நிகழ்ச்சி ஒன்றில் பாடிய 8 மாத கர்ப்பிணி பாடகி சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள லர்கானா நகர் அருகில் இருக்கும் கங்கா கிராமத்தில் சுன்னத் கல்யாண நிகழ்ச்சி நடந்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகி சமீரா சிந்து(28) மேடையில் பாடல்கள் பாடியுள்ளார்.
நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவரும் பாடல்களை ரசித்துக் கேட்டுள்ளனர்.
கர்ப்பம்
சமீரா 8 மாத கர்ப்பிணியாக இருந்ததால் நின்று கொண்டு பாடாமல் சேர் போட்டு அமர்ந்து பாடினார். இதை பார்த்த ஒருவர் எழுந்து நின்று பாடுமாறு சமீராவிடம் கூற அவரோ தன்னால் முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
கொலை
சமீரா எழுந்து நின்று பாட மறுத்தவுடன் அந்த நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சமீராவை நோக்கி சுட்டார். இதில் சமீரா பரிதாபமாக உயிர் இழந்தார்.
கைது
சமீராவின் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தாரிக் ஜதோய் என்கிற அந்த கொலையாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.
கொண்டாட்டம்
நிகழ்ச்சியில் ஜாலியாக துப்பாக்கியை எடுத்து விண்ணை நோக்கி சுட்டபோது குண்டு தவறுதலாக சமீரா மீது பட்டதாக தாரிக் தெரிவித்துள்ளார். தாரிக் துப்பாக்கியை காட்டி சமீராவை மிரட்டி சுட்டதாக அவரின் கணவர் ஆசிக் சம்மூ கூறியுள்ளார். எட்டு ஆல்பங்களை வெளியிட்டுள்ள சமீரா வீடுகளில் நடக்கும் விசேஷங்களில் பாடி தான் சம்பாதித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.