நடிகை ப்ரீத்தியை தொந்தரவு செய்தால் அவ்ளோ தான்: நுஸ்லி வாடியாவை மிரட்டிய தாதா

By Siva

மும்பை: நடிகை ப்ரீத்தி ஜிந்தாவை தொந்தரவு செய்வதை விடாவிட்டால் வாடியா குழுமத்தை சும்மா விட மாட்டோம் என்று நிழல் உலக தாதா ரவி பூஜாரி வாடியா குழும தலைவர் நுஸ்லிக்கு ஃபோன் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.

வாடியா குழுமத்தைச் சேர்ந்த நெஸ் வாடியா மீது பாலிவுட் நடிகையும், கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் இணை உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா பாலியல் புகார் கொடுத்தார். கடந்த மே மாதம் 30ம் தேதி மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டி நடந்தபோது தனது முன்னாள் காதலரும், பஞ்சாப் அணியின் இணை உரிமையாளருமான நெஸ் வாடியா தன்னை தரக்குறைவாகப் பேசி கண்ட இடத்தில் தொட்டதாக ப்ரீத்தி புகார் கொடுத்தார்.

Preity Ness Mess gets dirty: Wadia's complain of underworld threat

இந்நிலையில் நெஸ் வாடியாவின் தந்தையும், வாடியா குழும தலைவருமான நுஸ்லி மும்பை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

நிழல் உலக தாதா எனக்கு ஃபோன் மூலம் மிரட்டல் விடுத்தார். ப்ரீத்தியை தொந்தரவு செய்யாமல் இருந்தால் நல்லது. இல்லை என்றால் வாடியா குழுமம் பின்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்றார். எனவே மிரட்டல் விடுத்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

பேசியவர் தன்னை ரவி பூஜாரி என்று கூறிக் கொண்டதாகவும் வாடியா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X