Don't Miss!
- News ‛‛வேஸ்ட் செய்யாத’’.. நமக்கு ஓட்டு போடுறவங்களுக்கு மட்டும் பணம் கொடு.. அதிமுக வேட்பாளரால் சர்ச்சை
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
3 வருடமாக இழுத்தடித்த செக் மோசடி வழக்கிலிருந்து பிரீத்தி ஜிந்தா விடுதலை!
மும்பை: செக் மோசடி வழக்கில் நடிகை பிரீத்தி ஜிந்தாவை விடுதலை செய்து, மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிரபல நடிகையான பிரீத்தி ஜிந்தா மீது காசோலை மோசடி வழக்கை, எழுத்தாளர் அப்பாஸ் டயர்வாலா என்பவர் கடந்த 2013 ம் ஆண்டு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் பிரீத்தி ஜிந்தா மீது மும்பை அந்தேரி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இன்று இந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
2013 ம் ஆண்டு பிரீத்தி ஜிந்தா சொந்தமாக தயாரித்து, நடித்த படம் 'இஷ்க் இன் பாரிஸ்'. இதில் வசனகர்த்தாவாகப் பணியாற்றிய எழுத்தாளர் அப்பாஸ் டயர்வாலாவுக்கு ரூ 18.9 லட்சத்திற்கான காசோலை ஒன்றை பிரீத்தி வழங்கியிருந்தார்.
அப்பாஸ் டயர்வாலாவுக்கு, பிரீத்தி கொடுத்த காசோலை வங்கியில் பணமில்லை என்று திரும்பி விட்டது. இதையடுத்து அப்பாஸ், பிரீத்தி ஜிந்தா மீது காசோலை மோசடி வழக்கைத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த 3 வருடமாக இழுபறியாக இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று பிரீத்தியின் வழக்கறிஞர் ஹிதேஷ் ஜெயின் பிரீத்தி ஜிந்தா வழங்கிய காசோலையை அவருக்கு தெரிவிக்காமல், அப்பாஸ் வங்கியில் டெபாசிட் செய்ய முயன்றதாக வாதாடினார். ஹிதேஷ் ஜெயினின் வாதத்தை ஏற்றுக்கொண்ட அந்தேரி நீதிமன்றம், பிரீத்தி ஜிந்தாவை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்வதாக தீர்ப்பு வழங்கியது. 3 வருடங்களாக இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.