Don't Miss!
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- News "ரொம்ப தொந்தரவு பண்றீங்க..." வடிவேலுவிடம் டென்ஷனான நபர்.. சட்டென மாறிய முகம்.. அடுத்து என்னாச்சு
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
நடிகையை கையைப்பிடித்து இழுத்த வழக்கு: தொழில் அதிபர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
Recommended Video
மும்பை: பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவை கையை பிடித்து இழுத்து காயப்படுத்திய வழக்கில் தொழில் அதிபர் நெஸ் வாடியா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா தொழில் அதிபர் நெஸ் வாடியாவை காதலித்தார். ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் பஞ்சாப் அணியின் உரிமையாளர்கள் அவர்கள் இருவரும் தான்.
காதல் முறிந்து ஆளுக்கொரு பக்கம் சென்றுவிட்டார். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ப்ரீத்தி நெஸ் வாடியா மீது போலீசில் புகார் அளித்தார்.
காயம்
ஐபிஎல் போட்டி நடந்து கொண்டிருந்தபோது நெஸ் வாடியா ஸ்டேடியத்தில் தன்னை அசிங்கமாக திட்டியதாகவும், கையை பிடித்து இழுத்து காய்பபடுத்தியதாகவும் ப்ரீத்தி மும்பை போலீசில் புகார் அளித்தார்.
வழக்கு
2014ம் ஆண்டு மே மாதம் 30ம் தேதி நடந்த சம்பவம் குறித்து ப்ரீத்தி அப்போதே போலீசில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
வாடியா
சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து ப்ரீத்தி ஜிந்தா வழக்கில் நெஸ் வாடியா மீது நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது மும்பை போலீஸ். 354, 506, 509 ஆகிய பிரிவுகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆதாரம்
நெஸ் வாடியா தன் கையை இறுக்கிப்பிடித்ததில் காயம் அடைந்ததை புகைப்படம் எடுத்து போலீசாரிடம் அளித்தார் ப்ரீத்தி. ப்ரீத்தி வெளிநாட்டுக்காரரை திருமணம் செய்து செட்டிலான நேரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.