Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
நடிகையை கையைப்பிடித்து இழுத்த வழக்கு: தொழில் அதிபர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
Recommended Video
மும்பை: பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவை கையை பிடித்து இழுத்து காயப்படுத்திய வழக்கில் தொழில் அதிபர் நெஸ் வாடியா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா தொழில் அதிபர் நெஸ் வாடியாவை காதலித்தார். ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் பஞ்சாப் அணியின் உரிமையாளர்கள் அவர்கள் இருவரும் தான்.
காதல் முறிந்து ஆளுக்கொரு பக்கம் சென்றுவிட்டார். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ப்ரீத்தி நெஸ் வாடியா மீது போலீசில் புகார் அளித்தார்.
காயம்
ஐபிஎல் போட்டி நடந்து கொண்டிருந்தபோது நெஸ் வாடியா ஸ்டேடியத்தில் தன்னை அசிங்கமாக திட்டியதாகவும், கையை பிடித்து இழுத்து காய்பபடுத்தியதாகவும் ப்ரீத்தி மும்பை போலீசில் புகார் அளித்தார்.
வழக்கு
2014ம் ஆண்டு மே மாதம் 30ம் தேதி நடந்த சம்பவம் குறித்து ப்ரீத்தி அப்போதே போலீசில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
வாடியா
சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து ப்ரீத்தி ஜிந்தா வழக்கில் நெஸ் வாடியா மீது நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது மும்பை போலீஸ். 354, 506, 509 ஆகிய பிரிவுகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆதாரம்
நெஸ் வாடியா தன் கையை இறுக்கிப்பிடித்ததில் காயம் அடைந்ததை புகைப்படம் எடுத்து போலீசாரிடம் அளித்தார் ப்ரீத்தி. ப்ரீத்தி வெளிநாட்டுக்காரரை திருமணம் செய்து செட்டிலான நேரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.