Don't Miss!
- News கட்சியையே உடைக்கும் அளவிற்கு கோபம்.. வேலையை தொடங்கிய முக்கிய புள்ளி.. ஆட்டம் காணும் "அந்த" கட்சி?
- Finance கோடக் மஹிந்திரா பங்குகள் 10 சதவீதம் சரிவு.. முதலீட்டாளர்கள் பெரும் சோகம்.. டார்கெட் விலை குறைந்தது!!
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நெஸ் வாடியாவை, பிரீத்தி கடுமையாகத் திட்டினார்– தொழிலதிபர் வாக்குமூலம்
மும்பை: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளரான பிரீத்தி ஜிந்தா, அணியின் உரிமையாளரான நெஸ் வாடியாவை கடுமையாக திட்டினார் என்று பிரீத்தி ஜிந்தா மானபங்க வழக்கில் தொழிலதிபர் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்தி நடிகையான பிரீத்தி ஜிந்தா, அவருடைய முன்னாள் காதலர் மற்றும் பிரபல தொழிலதிபரான நெஸ் வாடியா மீது கடந்த ஜூன் மாதத்தில் மானபங்க புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அப்புகாரில், மே மாதம் நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின்போது தன்னை நெஸ் வாடியா பலபேர் முன்னிலையில் மானபங்கம் செய்து, மிரட்டியதாக பிரீத்தி தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மும்பை மெரின் டிரைவ் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் நெஸ் வாடியா மீது நடவடிக்கை எடுக்கும் முன்பு இரு தரப்பு சாட்சிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நெஸ் வாடியா தரப்பு சாட்சியான தொழில் அதிபர் சவன் தரு என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், சம்பவத்தன்று பிரீத்தி மற்றும் நெஸ் வாடியா பேசிக் கொண்டிருந்தனர்.
பின்னர் நெஸ் வாடியா புறப்பட்ட போது, நடிகை பிரீத்தி ஜிந்தா, நெஸ் வாடியாவைப் பார்த்து சத்தம் போட்டு கத்தினார். கடுமையான வார்த்தைகளால் திட்டினார் என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.