Don't Miss!
- News ரேஷன் அரிசி கடத்தும் ஆளுங்கட்சி புள்ளி "பாம்பு" கார்த்திக்.. விவகாரத்தை கையில் எடுத்த அண்ணாமலை!
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்கள் எதிரியை விட மோசமானவர்கள்... இவர்களிடம் தெரியாமகூட உதவி கேட்கக்கூடாது...!
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நெஸ் வாடியாவை, பிரீத்தி கடுமையாகத் திட்டினார்– தொழிலதிபர் வாக்குமூலம்
மும்பை: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளரான பிரீத்தி ஜிந்தா, அணியின் உரிமையாளரான நெஸ் வாடியாவை கடுமையாக திட்டினார் என்று பிரீத்தி ஜிந்தா மானபங்க வழக்கில் தொழிலதிபர் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்தி நடிகையான பிரீத்தி ஜிந்தா, அவருடைய முன்னாள் காதலர் மற்றும் பிரபல தொழிலதிபரான நெஸ் வாடியா மீது கடந்த ஜூன் மாதத்தில் மானபங்க புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அப்புகாரில், மே மாதம் நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின்போது தன்னை நெஸ் வாடியா பலபேர் முன்னிலையில் மானபங்கம் செய்து, மிரட்டியதாக பிரீத்தி தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மும்பை மெரின் டிரைவ் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் நெஸ் வாடியா மீது நடவடிக்கை எடுக்கும் முன்பு இரு தரப்பு சாட்சிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நெஸ் வாடியா தரப்பு சாட்சியான தொழில் அதிபர் சவன் தரு என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், சம்பவத்தன்று பிரீத்தி மற்றும் நெஸ் வாடியா பேசிக் கொண்டிருந்தனர்.
பின்னர் நெஸ் வாடியா புறப்பட்ட போது, நடிகை பிரீத்தி ஜிந்தா, நெஸ் வாடியாவைப் பார்த்து சத்தம் போட்டு கத்தினார். கடுமையான வார்த்தைகளால் திட்டினார் என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.