Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
விஜய்யை ஏமாற்றிய பிரேமம் இயக்குனர்... ஆசை காட்டி மோசம் செஞ்சிட்டாரே!
சென்னை : பீஸ்ட் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் வம்சி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்
நடிகை ரஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்
புதுப்புது இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வம் கொண்ட விஜய் பிரேமம் இயக்குனர் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளார்.
அஜித் படத்தை ட்ரோல் செய்தபோது எங்கே போனீர்கள்.. சாந்தனுவை வச்சு விளாசிய அஜித் ரசிகர்கள்!
வசூல் மன்னன்
நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் பல வசூல் சாதனைகளை செய்து வருகிறது. அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தது. அதுமட்டுமல்லாமல் இந்தியாவையும் கடந்து பல நாடுகளிலும் மாஸ்டர் திரைப்படம் சக்கை போடு போட்டது. விஜய் தன்னுடைய அடுத்தடுத்த படங்களை புது புது இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து விஜய் நெல்சன் உடன் கூட்டணி அமைத்தார்
பக்கா ஆக்ஷன்
கோலமாவு கோகிலா, டாக்டர் என இரண்டு சூப்பர் ஹிட் வெற்றி படங்களை அடுத்தடுத்து கொடுத்த நெல்சன்,விஜய் கூட்டணியில் உருவான பீஸ்ட் பக்கா ஆக்ஷன் திரைப்படமாக வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது . பீஸ்ட் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது என்றே சொல்லலாம் குறிப்பாக ஃபேமிலி ஆடியன்ஸ் இந்த படம் மிகவும் திருப்தி படுத்தி உள்ளது.
நேரடி தமிழ் திரைப்படம்
பீஸ்ட் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த வம்சி முதல் முறையாக விஜய்யுடன் இணைந்துள்ள திரைப்படம் நேரடி தமிழ் திரைப்படம் ஆகும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. இதில் கதாநாயகியாக நடிகை ரஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது
விஜய் ஏமாந்து போனார்
இந்த நிலையில் பிரேமம் இயக்குனர் பற்றிய விஜய் சுவாரசிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். ஒருநாள் பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கதை கூறுவதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். விஜய் தனக்குதான் கதை கூற வருகிறார் என ஆசையாக இருந்துள்ளார். வீட்டிற்கு வந்து அல்போன்ஸ் புத்திரன் விஜய்யின் மகன் சஞ்சய்- க்கு கதைக் கூற வந்துள்ளதாக கூறியுள்ளார் . தனக்கு தான் கதை சொல்லப் போகிறார் என ஆசையாக இருந்த விஜய் அப்போது ஏமாந்து போனாராம்.