Don't Miss!
- Automobiles தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- Sports IPL 2024 : கேகேஆர் அணியில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.. என்ன காரணம்? உண்மையை சொன்ன ரிங்கு சிங்!
- News எங்களை பாதுகாத்துக்கொள்ள தெரியும்! நட்பு நாடுகளின் அட்வைஸை ஏற்காத இஸ்ரேல்! மத்திய கிழக்கில் பதற்றம்
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ரஜினி, கமலுக்கு ப்ரேமம் இயக்குநரின் கோரிக்கை!
சென்னை : ஜி.எஸ்.டி வரி விதிப்பால் சாமானிய மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவருவதைப் போல திரையுலகத்திலும் அதிகமாகவே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தியேட்டர் டிக்கெட் கட்டணங்களும் ஜி.எஸ்.டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டதால் டிக்கெட் கட்டணங்கள் விலை உயர்த்தப்பட்டன.
சினிமா டிக்கெட் கட்டணங்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஆரம்பம் முதலே இருந்து வந்தது. மத்திய அரசும் சில பொருட்களுக்கான வரி விதிப்பிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தது.
இந்நிலையில், 'ப்ரேமம்' படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன், சினிமாவையும் சூதாட்டத்தையும் ஒரே ஜி.எஸ்.டி வகையில் வைத்திருப்பது சரியா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பிரதமர் மோடியைச் சந்தித்து ஜி.எஸ்.டி வரிவிதிப்பு பற்றி அவருடன் பேச வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார் அல்போன்ஸ் புத்திரன்.
தமிழ் சினிமாவில் மிகவும் மரியாதைக்குரிய பிரபலங்களாக இருக்கும் ரஜினியும், கமலும் இது பற்றி பேச வேண்டும். உங்கள் பேச்சு வார்த்தை திரையுலகத்தையும், ரசிகர்களையும் காப்பாற்றும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.