Don't Miss!
- News வில்லங்க சான்றிதழ்.. வீடு, மனை வாங்கறீங்களா? பத்திரப் பதிவுத்துறை சர்ப்ரைஸ்.. இனி லேட்டாகாது.. சபாஷ்
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தியாகராஜனுக்கு எதிரான ஃபேஸ்புக் பதிவை நீக்கிய பிரித்திகா மேனன்
சென்னை: புகைப்படக் கலைஞர் பிரித்திகா மேனன் நடிகர் தியாகராஜனுக்கு எதிராக பதிவிட்ட வலைதளப் பதிவை நீக்கியுள்ளார்.
நாடெங்கிலும் பூதாகரமாகியுள்ள மீடூ பிரச்சனையில் வரிசையாக பல பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன.
புகைப்படக்கலைஞரான பிரித்திகா மேனன் தயாரிப்பாளரும் நடிகருமான தியாகராஜன் மீது பாலியல் குற்றசாட்டு சுமத்தியிருந்தார்.
பிரசாந்த் நடித்த பொன்னர் சங்கர் திரைப்படத்தில் பணியாற்றியப் போது, தியாகராஜன் தவறான முறையில் அணுக முயன்றதாகவும், ஆபாச புகைப்படங்களை அவருக்கு அனுப்பியதாகவும், பிரித்திகா தங்கியிருந்த அறையின் கதவை நள்ளிரவில் தட்டியதால் அவர் பயத்தில் தூக்கம் தொலைத்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில், தன்னுடைய பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக பிரித்திகா இவ்வாறு சொல்வதாகவும் அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனவும் பதிலளித்தார் தியாகராஜன். மேலும், பிரித்திகாவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தியாகராஜன் தொடர்பாக பதிவிட்டிருந்ததை பிரித்திகாவின் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம் தெரியவில்லை.
இதுகுறித்து பிரத்தியேகமாக ஃபிலிமிபீட் நிரூபருக்கு பதிலளித்த நடிகர் தியாகராஜன், "ஒரு நடிகரின் நன்மதிப்பை சீர்குலைத்த பிறகு பிரித்திகா மேனன் முகநூல் பதிவை நீக்கியுள்ளார். ஒருவரைப் பற்றி தவறாக பதிவிட்டு ஃபேஸ்புக்கில் நீக்க முடியும். ஆனால் தியாகராஜன் என்ற நடிகர் மீது பட்ட கரையை நீக்க முடியுமா? மீடூ என்ற நல்ல மூவ்மென்ட்டை பெண்கள் தவறாக பயன்படுத்துவதற்கு இது சரியான உதாரணம்" என்றார். மேலும், அவர் மீது ஏற்படுத்திய களங்கத்திற்காக பிரித்திகா மேனன் மீது சட்டரீதியான நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.