Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
“அருமை, நல்ல முயற்சி”.. கூலி நம்பர் 1 படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி.. எதற்காகத் தெரியுமா?
படப்பிடிப்பில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்ததற்காக கூலி நம்பர் 1 படக்குழுவை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
சென்னை: படப்பிடிப்பின் போது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாததற்காக கூலி நம்பர் 1 படக்குழுவை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
இந்தியில் கோவிந்தா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் கூலி நம்பர் 1. இப்படம் இந்தியில் மீண்டும் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் கோவிந்தா நடித்த கதாபாத்திரத்தில் வருண் தவான் நடிக்கிறார்.
கூலி நம்பர் 1 ரீமேக் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஹீரோயின் ஜாக்கி பக்நானி, வருணுக்கு பிளாஸ்டிக் அல்லாத ஒரு தண்ணீர் பாட்டிலை பரிசளித்தார்.
யார் இது? அசினுக்கு இவ்வளவு பெரிய பொண்ணா.. இணையத்தில் வெளியான புகைப்படம்.. செம அதிர்ச்சி!
நல்ல முடிவு
இதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் மறுசுழற்றி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒரு புகைப்படத்தை சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார் நடிகர் வருண் தவான்.
வைரலானது
இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். இந்த தகவல் சமூகவலைதளத்தில் வைரலானது. திரைத் துறையினரின் இந்த முயற்சி நிச்சயம் பொதுமக்களிடம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் என கூலி நம்பர் ஒன் படக்குழுவை நெட்டிசன்கள் பாராட்டி பதிவுகள் வெளியிட்டனர். இந்தத் தகவல் பிரதமர் மோடி கவனத்திற்கும் சென்றுள்ளது.
|
மோடி பாராட்டு
அதனைத் தொடர்ந்து கூலி நம்பர் 1 படக்குழுவின் இந்த நல்ல நடவடிக்கையை வெகுவாக பாராட்டி டிவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "கூலி நம்பர் 1 படக்குழுவின் இந்த முடிவு அருமையானது. மறுசுழற்றி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை இந்தியாவில் இருந்து ஒழிக்க திரைத்துறையினரும் தங்களுடைய பங்களிப்பை கொடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது", என குறிப்பிட்டுள்ளார்.
விழிப்புணர்வு
பிரதமரின் இந்த பாராட்டால் கூலி நம்பர் 1 படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிளாஸ்டிக் பொருட்கள் மீதான கட்டுப்பாட்டை தொடர்ந்து கடைப்பிடிக்க அவர்கள் உறுதி பூண்டுள்ளனர். கூலி நம்பர் 1 படக்குழுவின் இந்த கொள்கையை மற்ற படக்குழுக்களும், திரை நட்சத்திரங்களும் கையில் எடுத்தால், நிச்சயம் அவர்களது ரசிகர்களும் அதனைப் பின்பற்ற ஆரம்பித்து விடுவார்கள். மாற்றம் எளிதில் வசமாகி விடும் என்பதில் சந்தேகமேயில்லை.