Don't Miss!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- News அட****** லைவ்வில் வார்த்தையை விட்ட நிருபர்! சமாளித்த ஆங்கர்..! நிருபருக்காக மன்னிப்பு கேட்ட சேனல்..!
- Lifestyle ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- Finance இந்தியாவுக்கு டேக்கா கொடுத்த எலான் மஸ்க்.. டெஸ்லா தொழிற்சாலை இப்போதைக்கு வராது..!!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
“அருமை, நல்ல முயற்சி”.. கூலி நம்பர் 1 படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி.. எதற்காகத் தெரியுமா?
படப்பிடிப்பில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்ததற்காக கூலி நம்பர் 1 படக்குழுவை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
சென்னை: படப்பிடிப்பின் போது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாததற்காக கூலி நம்பர் 1 படக்குழுவை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
இந்தியில் கோவிந்தா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் கூலி நம்பர் 1. இப்படம் இந்தியில் மீண்டும் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் கோவிந்தா நடித்த கதாபாத்திரத்தில் வருண் தவான் நடிக்கிறார்.
கூலி நம்பர் 1 ரீமேக் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஹீரோயின் ஜாக்கி பக்நானி, வருணுக்கு பிளாஸ்டிக் அல்லாத ஒரு தண்ணீர் பாட்டிலை பரிசளித்தார்.
யார் இது? அசினுக்கு இவ்வளவு பெரிய பொண்ணா.. இணையத்தில் வெளியான புகைப்படம்.. செம அதிர்ச்சி!
நல்ல முடிவு
இதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் மறுசுழற்றி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒரு புகைப்படத்தை சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார் நடிகர் வருண் தவான்.
வைரலானது
இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். இந்த தகவல் சமூகவலைதளத்தில் வைரலானது. திரைத் துறையினரின் இந்த முயற்சி நிச்சயம் பொதுமக்களிடம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் என கூலி நம்பர் ஒன் படக்குழுவை நெட்டிசன்கள் பாராட்டி பதிவுகள் வெளியிட்டனர். இந்தத் தகவல் பிரதமர் மோடி கவனத்திற்கும் சென்றுள்ளது.
|
மோடி பாராட்டு
அதனைத் தொடர்ந்து கூலி நம்பர் 1 படக்குழுவின் இந்த நல்ல நடவடிக்கையை வெகுவாக பாராட்டி டிவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "கூலி நம்பர் 1 படக்குழுவின் இந்த முடிவு அருமையானது. மறுசுழற்றி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை இந்தியாவில் இருந்து ஒழிக்க திரைத்துறையினரும் தங்களுடைய பங்களிப்பை கொடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது", என குறிப்பிட்டுள்ளார்.
விழிப்புணர்வு
பிரதமரின் இந்த பாராட்டால் கூலி நம்பர் 1 படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிளாஸ்டிக் பொருட்கள் மீதான கட்டுப்பாட்டை தொடர்ந்து கடைப்பிடிக்க அவர்கள் உறுதி பூண்டுள்ளனர். கூலி நம்பர் 1 படக்குழுவின் இந்த கொள்கையை மற்ற படக்குழுக்களும், திரை நட்சத்திரங்களும் கையில் எடுத்தால், நிச்சயம் அவர்களது ரசிகர்களும் அதனைப் பின்பற்ற ஆரம்பித்து விடுவார்கள். மாற்றம் எளிதில் வசமாகி விடும் என்பதில் சந்தேகமேயில்லை.