Don't Miss!
- Finance டாடா பங்குகளை விற்ற ரேகா ஜுன்ஜுன்வாலா.. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ஷாக்..!!
- News கோவை தேக்கம்பட்டியில் வாக்களித்தார் 108 வயது இயற்கை விவசாயி பாப்பம்மாள்!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கொரோனாவால் முடங்கிய சினிமா.. தொழிலாளர்களுக்கு ரூ. 3 லட்சம் நிதி அளித்த ப்ருத்விராஜ்
கொச்சி : கொரோனா வைரசால் சினிமாத்துறை முற்றிலுமாக முடங்கி போய் உள்ளது. இதற்கிடையில் சினிமா துறையை சேர்ந்த பலரும் கொரோனாவால் தினம் தினம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கேரளா சினிமா தொழிலாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் உன்னிகிருஷ்ணன், பேஸ்புக்கில் நடிகர் ப்ருத்விராஜிற்கு நன்றி தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் மருத்துவ செலவு உள்ளிட்ட உதவிகளை மேற்கொள்ள ரூ.3 லட்சத்தை ப்ருத்விராஜ் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் மோகன்லால் நடித்த பிக் பிரதர் படத்தை தயாரித்த பிலிபோஸ் கே ஜோசப், சினிமா தொழிலாளர்கள் நிவாரண நிதிக்காக ரூ.5 லட்சத்தை வழங்கினார். அனூப் மேனனும் ரூ.1 லட்சம் நிதி வழங்கி உள்ளார்.
தோஹா ஏர்போர்ட்டில் படையப்பா ஸ்டைலில் ரசிகருக்கு ராயல் சல்யூட் அடித்த ரஜினி.. தெறிக்கும் டிவிட்டர்!
கொரோனா பெருந்தொற்று காலத்தில் கேரளா சினிமா தொழிலாளர்கள் கூட்டமைப்பின் 19 சங்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு உதவ நிதி திரட்டப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. பெறப்படும் நிதியை கொண்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட சங்க உறுப்பினர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50,000 வழங்க கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.
உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. நிதி அளித்துள்ள நடிகர்களுக்கு கேரள சினிமா டைரடர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.