Don't Miss!
- News ஜஸ்ட் 26 வயசு தான்! தனிஆளாய் பாஜக-காங்கிரசை மிரட்டும் ராஜ்புத் இளைஞர்! யார் இந்த ராஜஸ்தான் ரவீந்திரா
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Lifestyle இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கொரோனாவால் முடங்கிய சினிமா.. தொழிலாளர்களுக்கு ரூ. 3 லட்சம் நிதி அளித்த ப்ருத்விராஜ்
கொச்சி : கொரோனா வைரசால் சினிமாத்துறை முற்றிலுமாக முடங்கி போய் உள்ளது. இதற்கிடையில் சினிமா துறையை சேர்ந்த பலரும் கொரோனாவால் தினம் தினம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கேரளா சினிமா தொழிலாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் உன்னிகிருஷ்ணன், பேஸ்புக்கில் நடிகர் ப்ருத்விராஜிற்கு நன்றி தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் மருத்துவ செலவு உள்ளிட்ட உதவிகளை மேற்கொள்ள ரூ.3 லட்சத்தை ப்ருத்விராஜ் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் மோகன்லால் நடித்த பிக் பிரதர் படத்தை தயாரித்த பிலிபோஸ் கே ஜோசப், சினிமா தொழிலாளர்கள் நிவாரண நிதிக்காக ரூ.5 லட்சத்தை வழங்கினார். அனூப் மேனனும் ரூ.1 லட்சம் நிதி வழங்கி உள்ளார்.
தோஹா ஏர்போர்ட்டில் படையப்பா ஸ்டைலில் ரசிகருக்கு ராயல் சல்யூட் அடித்த ரஜினி.. தெறிக்கும் டிவிட்டர்!
கொரோனா பெருந்தொற்று காலத்தில் கேரளா சினிமா தொழிலாளர்கள் கூட்டமைப்பின் 19 சங்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு உதவ நிதி திரட்டப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. பெறப்படும் நிதியை கொண்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட சங்க உறுப்பினர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50,000 வழங்க கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.
உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. நிதி அளித்துள்ள நடிகர்களுக்கு கேரள சினிமா டைரடர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.