வசந்த பாலன் இயக்கும் காவியத் தலைவன் - பிருத்விராஜ் இன்னொரு ஹீரோ!

அரவான் படத்துக்குப் பிறகு வசந்த பாலன் இயக்கும் படம் இது. கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலம் இந்த ஸ்க்ரிப்டை உருவாக்கி வந்தார்.
படத்தில் ஒரு ஹீரோவாக சித்தார்த் நடிப்பார் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தார். இப்போது அடுத்த ஹீரோவாக ப்ருத்விராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
நாயகிகளாக லட்சுமி மேனன் அல்லது நஸ்ரியா நஸீம் நடிப்பார்கள் என தெரிகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது. வசந்த பாலனுடன் அவர் இணையும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அரவான் மாதிரி இந்தப் படமும் குறிப்பிட்ட காலகட்டத்தைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
Comments


Click it and Unblock the Notifications