Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஹிட் படத்தில் நடித்தும் வாய்ப்பில்லை.. பிருத்விராஜ் ஜோடியான பிரபல ஹீரோயின்.. தொடங்கியது ஷூட்டிங்!
சென்னை: ஹிட் படத்தில் நடித்தும் தமிழில் வாய்ப்பில்லாத, அதிதி பாலன் மலையாளத்தில் பிருத்விராஜ் ஜோடியாக நடிக்கிறார்.
அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கிய படம், 'அருவி'. அதிதி பாலன் நாயகியாக நடித்திருந்தார்.
அஞ்சலி வரதன், லட்சுமி கோபாலசாமி, கவிதா பாரதி உள்பட பலர் நடித்திருந்தனர்.
என்னை அறிந்தால்
2017 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதிதி பாலனுக்கு சில விருதுகளும் கிடைத்தது. இதற்கு முன்பு அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் ஒரு பாடலில் இடம் பெற்றிருந்தார். அதில் அதிகம் கவனிக்கப் படவில்லை.
நிவினின் படவெட்டு
அருவி படத்துக்குப் பிறகு அதிதிக்கு தமிழில் வாய்ப்பில்லை என்றாலும் இப்போது அவர் மலையாளத்தில் இரண்டு படங்களில் நடிக்கிறார். நிவின் பாலி ஹீரோவாக நடிக்கும் படவெட்டு படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் அதிதி பாலன். அந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கோல்ட் கேஸ்
விரைவில் மீண்டும் தொடங்குகிறது. இந்நிலையில், பிருத்விராஜ் ஹீரோவாக நடிக்கும் கோல்ட் கேஸ் என்ற படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகி இருக்கிறார் அதிதி பாலன். இந்த படத்தின் படிப்பிடிப்பு கேரளாவில் சில நாட்களுக்கு முன் தொடங்கி இருக்கிறது. கொரோனா பாதுகாப்பு நிபந்தனைகளுடன் இதன் ஷூட்டிங் தொடங்கியுள்ளது.
ஒருவாரம் தனிமை
இந்தப் படத்தை தனு பலக் இயக்குகிறார். சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டுள்ள பிருத்விராஜ், இன்னும் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதையடுத்து வேறொரு படத்தில் நடிக்க இருக்கிறார். அதன் ஷூட்டிங் முடிந்த பிறகு இந்த படத்தில் கலந்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.
முகக்கவசம் இன்றி
நடிகை அதிதி பாலன் கடந்த சில நாட்களுக்கு முன், கொடைக்கானலில், ஏரிச் சாலை பகுதியில் முகக்கவசம் இன்றி காரில் பயணம் செய்தார். இதையடுத்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சுகாதரத் துறையினர் முகக் கவசம் அணியாததற்காக, அவருக்கு அபராதம் விதித்தது இருந்தனர்.