Don't Miss!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஓரேயோரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- News கோயிலில் பிரார்த்தனை செய்து பிரசாரத்தை தொடங்கிய செஞ்சி மஸ்தான்.. டீ போட்டு வாக்கு சேகரித்தார்
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
கொஞ்சம் ரெஸ்ட் வேணும்.... சினிமாவுக்கு திடீர் லீவு போட்ட ஹீரோ!
கொச்சி: சினிமாவுக்கு மூன்று மாதம் விடுமுறை விட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார் நடிகர் பிருத்விராஜ்.
தமிழில், கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும், காவியத் தலைவன் உட்பட பல படங்களில் நடித்தவர், மலையாள ஹீரோ பிருத்விராஜ்.
இவர் மோகன்லால் நடித்த லூசிபர் என்ற படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். இந்தப் படம் ஹிட்டானது. அடுத்து எம்புரான் என்ற படத்தை இயக்க இருக்கிறார்.
இதற்கிடையே அவர் நடித்து வந்த அய்யப்பாவும் கோஷியும் என்ற படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இதையடுத்து அவர் சினிமாவுக்கு சில மாதங்கள் பிரேக் விடப் போவதாக செய்திகள் வந்தன.
மீனா மட்டுமல்ல குஷ்புவும் இருக்காங்க.. அண்ணாமலை, முத்து ரேஞ்சுக்கு உருவாகப்போகும் தலைவர் 168!
மனைவி சுப்ரியா, மகள் அலங்கிரிதா மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டன. இந்நிலையில் இதை உறுதி செய்துள்ளார் பிருத்விராஜ்.
அதன்படி, அடுத்த மூன்று மாதங்களுக்கு சினிமாவுக்கு லீவு விட்டிருப்பதாகக் கூறியுள்ள பிருத்விராஜ், ஆடுஜீவிதம் என்ற தனது லட்சிய படத்துக்கான ஒரு பயிற்சியாக இந்த விடுமுறையை எடுத்துக்கொள்கிறேன். எனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.