Don't Miss!
- News ஆட்டத்தை கலைத்த பாஜக.. பெரிய கூட்டணி இல்லாமல் களம் இறங்கும் அதிமுக.. வேட்பாளர்கள் பட்டியல் எப்போது?
- Finance 20000 ரூபாய்க்கு கீழ் பெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் - பட்ஜெட் ஷாப்பிங்
- Automobiles கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஆண்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த 6 விஷயங்களை அவசியம் தெரிஞ்சு வைச்சுக்கணுமாம்...!
- Technology அதிரி புதிரி ஆர்டர்.. 66W சார்ஜிங்.. 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் விவோ போன்.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
வணக்கம் சென்னையில் கலக்கிய சிவா -பிரியா ஆனந்த் ஜோடி... மீண்டும் இணையும் காசேதான் கடவுளடா ரீமேக்
சென்னை : நடிகர் மிர்ச்சி சிவா மற்றும் பிரியா ஆனந்த் ஜோடி வணக்கம் சென்னை படத்தில் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தியது.
ரசிகர்களிடம் இந்த ஜோடி மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் இணைகிறார்கள்.
ஆர் கண்ணன் இயக்கத்தில் உருவாகவுள்ள காசேதான் கடவுளடா படத்தின் ரீமேக்கில் சிவாவிற்கு மீண்டும் ஜோடியாகியுள்ளார் பிரியா ஆனந்த்.
மிர்ச்சி சிவா… யோகி பாபு கூட்டணியில் ரீமேக் ஆகிறது காசேதான் கடவுளடா!
2013ல் வெளியான படம்
நடிகர் மிர்ச்சி சிவா மற்றும் பிரியா ஆனந்த் கடந்த 2013ல் வெளியான வணக்கம் சென்னை படத்தில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி வெகுவாக பாராட்டப்பட்டது. அனிருத்தின் இசையில் பாடல்களும் சிறப்பான வரவேற்பை பெற்றது.
காசேதான் கடவுளடா ரீமேக்
இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஜோடி மீண்டும் இணையவுள்ளது. ஆர் கண்ணன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகவுள்ள காசேதான் கடவுளடா படத்தின் ரீமேக்கில் சிவா, யோகிபாபு உள்ளிட்டவர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தில் லஷ்மி நடித்த கதாபாத்திரத்தில் பிரியா ஆனந்த் நடிக்கவுள்ளார்.
1972ல் வெளியான படம்
முத்துராமன், தேங்காய் சீனிவாசன் நடித்த கேரக்டர்களில் சிவாவும் யோகிபாபுவும் நடிக்கவுள்ளதாக இயக்குர் தெரிவித்துள்ளார். கடந்த 1972ம் ஆண்டில் வெளியான இந்த படம் எவர்கிரீன் காமெடி படமாக இன்றும் போற்றப்படுகிறது. இந்த படத்தில் மனோரமாவும் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது அந்த கேரக்டரில் ஊர்வசி நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து சூட்டிங்
பல தலைமுறைகளை கடந்தும் ரசிகர்களால் விரும்பப்படும் இந்த படத்தை நவீன காலத்திற்கு ஏற்றவகையில் ரீமேக் செய்யவுள்ளதாகவும் கண்ணன் கூறியுள்ளார். வரும் 15ம் தேதி படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு ஒரே கட்டமாக 35 நாட்கள் தொடர்ந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.