Don't Miss!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- News ஸ்டாலின் கேட்ட கேள்வி! மேஜையில் இருந்த உளவுத்துறை ரிப்போர்ட! 40ல் வெற்றி உறுதி.. ஆனா.. ஒரு சிக்கலாமே
- Lifestyle தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வணக்கம் சென்னையில் கலக்கிய சிவா -பிரியா ஆனந்த் ஜோடி... மீண்டும் இணையும் காசேதான் கடவுளடா ரீமேக்
சென்னை : நடிகர் மிர்ச்சி சிவா மற்றும் பிரியா ஆனந்த் ஜோடி வணக்கம் சென்னை படத்தில் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தியது.
ரசிகர்களிடம் இந்த ஜோடி மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் இணைகிறார்கள்.
ஆர் கண்ணன் இயக்கத்தில் உருவாகவுள்ள காசேதான் கடவுளடா படத்தின் ரீமேக்கில் சிவாவிற்கு மீண்டும் ஜோடியாகியுள்ளார் பிரியா ஆனந்த்.
மிர்ச்சி சிவா… யோகி பாபு கூட்டணியில் ரீமேக் ஆகிறது காசேதான் கடவுளடா!
2013ல் வெளியான படம்
நடிகர் மிர்ச்சி சிவா மற்றும் பிரியா ஆனந்த் கடந்த 2013ல் வெளியான வணக்கம் சென்னை படத்தில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி வெகுவாக பாராட்டப்பட்டது. அனிருத்தின் இசையில் பாடல்களும் சிறப்பான வரவேற்பை பெற்றது.
காசேதான் கடவுளடா ரீமேக்
இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஜோடி மீண்டும் இணையவுள்ளது. ஆர் கண்ணன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகவுள்ள காசேதான் கடவுளடா படத்தின் ரீமேக்கில் சிவா, யோகிபாபு உள்ளிட்டவர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தில் லஷ்மி நடித்த கதாபாத்திரத்தில் பிரியா ஆனந்த் நடிக்கவுள்ளார்.
1972ல் வெளியான படம்
முத்துராமன், தேங்காய் சீனிவாசன் நடித்த கேரக்டர்களில் சிவாவும் யோகிபாபுவும் நடிக்கவுள்ளதாக இயக்குர் தெரிவித்துள்ளார். கடந்த 1972ம் ஆண்டில் வெளியான இந்த படம் எவர்கிரீன் காமெடி படமாக இன்றும் போற்றப்படுகிறது. இந்த படத்தில் மனோரமாவும் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது அந்த கேரக்டரில் ஊர்வசி நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து சூட்டிங்
பல தலைமுறைகளை கடந்தும் ரசிகர்களால் விரும்பப்படும் இந்த படத்தை நவீன காலத்திற்கு ஏற்றவகையில் ரீமேக் செய்யவுள்ளதாகவும் கண்ணன் கூறியுள்ளார். வரும் 15ம் தேதி படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு ஒரே கட்டமாக 35 நாட்கள் தொடர்ந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.